மேலும் அறிய

Crime: தலைக்கு ஏறிய போதை... பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை..!

பெண் குழந்தைகளுக்கு எதிராக அவர்களது தந்தைகளே பாலியல் வன்கொடுமை செய்கின்ற சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதில், இரண்டு கொடூர சம்பவங்களை கீழே காணலாம். 

பெண் குழந்தைகளுக்கு எதிராக அவர்களது தந்தைகளே பாலியல் வன்கொடுமை செய்கின்ற சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதில், இரண்டு கொடூர சம்பவங்களை கீழே காணலாம். 

சிறுமிக்கு வயிற்றுவலி:

சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாகவே அந்த சிறுமிக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்துள்ளார். குறிப்பிட்ட சில மாதங்களாக மாதவிடாய் வரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து, சிறுமியின் வயிறும் நாளுக்குநாள் பெரிதாகி கொண்டே இருந்தது. வயிற்றில் கட்டி இருக்குமோ என்ற பயத்தில் தனது மகளின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அந்த சிறுமியின் தாய், சிறுமியை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

தந்தை செய்த கொடூரம்:

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் எடுத்து வருமாரு அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்கள் ஆலோசனைபடி, பரிசோதனை மேற்கொண்டதில் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் தந்தையே போதையில் தனது மகளிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த காவல்துறையினர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையின் அடைத்தனர். 

மற்றொரு கொடூர சம்பவம்:

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 45 வயது நபர், தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி கணவர் மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.  தாய் பிரிந்த சோகத்தில் அந்த சிறுமிக்கு மனநலம் பாதித்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், அந்த 13 வயது சிறுமியின் தந்தை தன் சொந்த மகள் என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். ஒரு கட்டம்வரை பொறுமையாக இருந்த சிறுமி தனது தந்தையால் தனக்கு ஏற்படும் கொடுமையை பள்ளி ஆசிரியர்களிடம் சொல்லி கதறி இருக்கிறது. இதையடுத்து சிறுமியின் பள்ளி ஆசிரியர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க, இந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமியை அவரது தந்தையே பாலியன் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் குற்றவாளி என நிருபித்து, 107 ஆண்டுகள் சிறை தண்டனை 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். 

போக்சோ சட்டம் : 

கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 

  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
  • Sexual Assault - பாலியல் தொல்லை
  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு
  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை 
    இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
  • 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget