மேலும் அறிய

கோவையில் மது குடித்த 2 பேர் உயிரிழந்த விவகாரம்: சயனைடு கலந்த மது கொடுத்து கொலை செய்த இளைஞர் கைது

குடும்ப தகராறு காரணமாக மனோகரனின் மருமகன் சத்யராஜ் (30) மதுபாட்டிலில் சயனைடு கலந்து கொடுத்ததும், இது தெரியாமல் அவர் தனது நண்பரான வேலுசாமியுடன் சேர்ந்து குடித்ததில் இருவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. 56 வயதான இவர் விவசாயியாக இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்ற 58 வயதான விவசாயி வேலுச்சாமியின் உறவினர். இந்நிலையில் இருவரும் பொன்னாக்கணி பகுதியில் உள்ள வேலுசாமியின் விவசாய நிலத்தில்  விவசாயப் பணிகளை முடித்துவிட்டு, இருவரும் மது அருந்தி உள்ளனர். மது குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் மனோகரனை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனோகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து இருவரது உடல்களும் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் நடந்தப் பகுதி நெகமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பது தெரியவந்ததை அடுத்து, நெகமம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

 

வேலுசாமி
வேலுசாமி

மது அருந்திய இருவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்ததால் இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச் சாரயமா? என்ற கோணத்தில் நெகமம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இறந்தவர்கள் குடித்த மது பாட்டில், உணவு வகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்நிலையில் விசாரணையில் திடீர் திருப்பமாக சயனைடு கலந்த மதுவினை குடித்து இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இருவரும் குடிபோதையில் இறந்ததாகவும், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விரும்பவில்லை என்றும் இருவரது குடும்பத்தினரும் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். பின்னர், மனோகரனின் மருமகன் சத்யராஜ், இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பக் கூடாது என்று குடும்பத்தினரை மூளைச் சலவை செய்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், சூலூர் அருகே பாப்பம்பட்டியில் உள்ள தனியார் கோழி தீவன தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரியும் பி.இ. பட்டதாரி சத்யராஜிடம் விசாரணை நடத்தினர். 

இதில் குடும்ப தகராறு காரணமாக மனோகரனின் மருமகன் சத்யராஜ் (30) மதுபாட்டிலில் சயனைடு கலந்து கொடுத்ததும், இது தெரியாமல் அவர் தனது நண்பரான வேலுசாமியுடன் சேர்ந்து குடித்ததில் இருவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது. சத்யராஜ், மனோகரன் மகள் மாசிலாமணி (26) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. பிரச்னை ஏற்படும்போதெல்லாம் மனோகரன் தலையிட்டு மகளை அழைத்துச் சென்றார். ஆறு மாதங்களுக்கு முன், தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்னையால், மனோகரன், தன் மகள் மாசிலாமணியை, பொன்னாக்காணி கிராமத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மகளை சத்யராஜுடன் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார். 

இதற்கிடையில், மனோகரன் அண்மையில் தனது நிலத்தை 32 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்தத் தொகையை பொன்னகனியில் உள்ள தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த தொகையை கொள்ளையடிக்க சத்யராஜ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே 7 ஆயிரம் ரூபாய் செலவழித்து ஆன்லைனில் சயனைடு வாங்கினார். மதுவில் கலந்து விட்டு, மனோகரனுக்கு வழங்கியுள்ளார். பின்னர் அந்த மதுவை தனது நண்பர் வேலுசாமியுடன் இணைந்து குடித்து உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சத்யராஜை கைது செய்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget