மேலும் அறிய

கோவையில் மது குடித்த 2 பேர் உயிரிழந்த விவகாரம்: சயனைடு கலந்த மது கொடுத்து கொலை செய்த இளைஞர் கைது

குடும்ப தகராறு காரணமாக மனோகரனின் மருமகன் சத்யராஜ் (30) மதுபாட்டிலில் சயனைடு கலந்து கொடுத்ததும், இது தெரியாமல் அவர் தனது நண்பரான வேலுசாமியுடன் சேர்ந்து குடித்ததில் இருவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. 56 வயதான இவர் விவசாயியாக இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்ற 58 வயதான விவசாயி வேலுச்சாமியின் உறவினர். இந்நிலையில் இருவரும் பொன்னாக்கணி பகுதியில் உள்ள வேலுசாமியின் விவசாய நிலத்தில்  விவசாயப் பணிகளை முடித்துவிட்டு, இருவரும் மது அருந்தி உள்ளனர். மது குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் மனோகரனை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனோகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து இருவரது உடல்களும் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் நடந்தப் பகுதி நெகமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பது தெரியவந்ததை அடுத்து, நெகமம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

 

வேலுசாமி
வேலுசாமி

மது அருந்திய இருவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்ததால் இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச் சாரயமா? என்ற கோணத்தில் நெகமம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இறந்தவர்கள் குடித்த மது பாட்டில், உணவு வகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்நிலையில் விசாரணையில் திடீர் திருப்பமாக சயனைடு கலந்த மதுவினை குடித்து இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இருவரும் குடிபோதையில் இறந்ததாகவும், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விரும்பவில்லை என்றும் இருவரது குடும்பத்தினரும் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். பின்னர், மனோகரனின் மருமகன் சத்யராஜ், இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பக் கூடாது என்று குடும்பத்தினரை மூளைச் சலவை செய்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், சூலூர் அருகே பாப்பம்பட்டியில் உள்ள தனியார் கோழி தீவன தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரியும் பி.இ. பட்டதாரி சத்யராஜிடம் விசாரணை நடத்தினர். 

இதில் குடும்ப தகராறு காரணமாக மனோகரனின் மருமகன் சத்யராஜ் (30) மதுபாட்டிலில் சயனைடு கலந்து கொடுத்ததும், இது தெரியாமல் அவர் தனது நண்பரான வேலுசாமியுடன் சேர்ந்து குடித்ததில் இருவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது. சத்யராஜ், மனோகரன் மகள் மாசிலாமணி (26) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. பிரச்னை ஏற்படும்போதெல்லாம் மனோகரன் தலையிட்டு மகளை அழைத்துச் சென்றார். ஆறு மாதங்களுக்கு முன், தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்னையால், மனோகரன், தன் மகள் மாசிலாமணியை, பொன்னாக்காணி கிராமத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மகளை சத்யராஜுடன் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார். 

இதற்கிடையில், மனோகரன் அண்மையில் தனது நிலத்தை 32 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்தத் தொகையை பொன்னகனியில் உள்ள தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த தொகையை கொள்ளையடிக்க சத்யராஜ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே 7 ஆயிரம் ரூபாய் செலவழித்து ஆன்லைனில் சயனைடு வாங்கினார். மதுவில் கலந்து விட்டு, மனோகரனுக்கு வழங்கியுள்ளார். பின்னர் அந்த மதுவை தனது நண்பர் வேலுசாமியுடன் இணைந்து குடித்து உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சத்யராஜை கைது செய்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
Embed widget