மேலும் அறிய

‛டின்னர்’ செய்யாத வீட்டார்; மனமுடைந்து வாலிபர் தற்கொலை!

வீட்டில் சாப்பாடு செய்யாததால் கோபமடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (29) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு வேலாயுதம் என்கிற அண்ணனும், நாகப்பன் என்கிற தம்பியும் உள்ளனர். மூவருக்கும் தாய்,  தந்தை இல்லாததால் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். தங்களுடைய அன்றாட தேவைகள், உணவு தயார் செய்தல் உள்ளிட்டவற்றை மூன்று  சகோதரர்களும் இணைந்து செய்து வந்துள்ளனர். ஆனால் வேலாயுதம் மது பழக்கத்திற்கு அடிமையாகி, தொடர்ந்து மது அருந்தி விட்டு நண்பர்களுடன் வெளியில் சுற்றுவது, காலம் தாழ்ந்து வீட்டிற்கு வருவது ஆகியவற்றை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

‛டின்னர்’ செய்யாத வீட்டார்; மனமுடைந்து வாலிபர் தற்கொலை!
இந்நிலையில், மதுபோதைக்கு அடிமையான வேல்முருகன் நேற்று நேற்றிரவு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அண்ணன் வேலாயுதம், தம்பி நாகப்பன் ஆகியோரிடம் சாப்பாடு கேட்டுள்ளார். ஆனால் அன்று இருவருமே நாங்கள் சாப்பாடு தயார் செய்யவில்லை என கையை விரித்த காரணத்தால் போதையில் கோபித்துக் கொண்ட வேல்முருகன் அறைக்கு சென்று அங்கிருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
‛டின்னர்’ செய்யாத வீட்டார்; மனமுடைந்து வாலிபர் தற்கொலை!
 
இதனை அறிந்த இருவரும் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்து, தூக்கில் தொங்கிய வேல்முருகனை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே வேல்முருகன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

‛டின்னர்’ செய்யாத வீட்டார்; மனமுடைந்து வாலிபர் தற்கொலை!
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் உடலை மீட்ட சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேல்முருகனின் சகோதரர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சம்பவம் நடந்த இரவு வேல்முருகன் அதிக அளவு மது போதையில் வந்துள்ளார். அன்று இரவு நாங்கள் உணவு செய்யவில்லை உணவகத்தில் தான் நாங்கள் சாப்பிட்டோம். இந்நிலையில் நண்பர்களுடன் மது குடிக்கச் சென்ற தன்னுடைய சகோதரன் வேல்முருகன் இரவில் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. எனவே அவர் நண்பர்களுடன் உணவு அருந்தி இருப்பார் என நினைத்து விட்டு விட்டோம். நள்ளிரவில் வந்த வேல்முருகன் திடீரென்று எங்களிடம் உணவு கேட்டார், நாங்களும் அவர் குடிபோதையில் வந்ததால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உணவு இல்லை என்று கண்டிப்புடன் சொல்லி விட்டோம். இந்நிலையில் தான் வேல்முருகன் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
‛டின்னர்’ செய்யாத வீட்டார்; மனமுடைந்து வாலிபர் தற்கொலை!
 
சகோதரர்கள் சொல்வதுபோல் உணவு இல்லை என்பதற்காக தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என வழக்கு பதிவு செய்து சுங்கா சத்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் சாப்பாடு செய்யாததால் கோபமடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் : 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget