மேலும் அறிய

சென்னை பெசன்ட் நகரில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி உயிரிழப்பு...!

சென்னை பெசன்ட் நகர் பகுதியிலுள்ள கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த தரணி என்ற சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பெசன்ட் நகர், ஓடை தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ்-காயத்திரி தம்பதியின் 13 வயது இளைய மகள் தரணி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள மணி என்பவரின் கடையில் ’டொகிட்டோ கோலா’ என்ற குளிர்பானம் மற்றும் ’ரஸ்னா’ ஆகியவற்றை வாங்கியுள்ளார். 

சென்னை பெசன்ட் நகரில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி உயிரிழப்பு...!
 
அந்த இரண்டு குளிர்பானங்களையும் குடித்த சிறிது நேரத்தில் சிறுமி தரணிக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. வீட்டிலேயே மயங்கிய நிலையில் இருந்த தரணியை அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சென்னை பெசன்ட் நகரில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி உயிரிழப்பு...!
அங்கு சிறுமி தரணியின் உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறிய நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி தரணி உயிரிழந்தது குறித்து உறவினர்கள் மளிகை கடையில் கேட்ட போது மளிகை கடை உரிமையாளர் மணி அலட்சியமாக அவர் பதிலளித்ததாக உயிரிழந்த சிறுமி தரணியின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சென்னை பெசன்ட் நகரில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி உயிரிழப்பு...!
 
சிறுமி உயிரிழப்பு தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ததுடன் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
சிறுமி தரணி உட்கொண்ட குளிர்பானம் மற்றும் ரஸ்னா ஆகியவற்றை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ள போலிசார், சிறுமியின் உயிரிழந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகரில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி உயிரிழப்பு...!
 
பெசண்ட் நகரில் மணி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் காலாவதியான, தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வதாகவும் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்களும், பெசண்ட்நகர் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பெசண்ட்நகர் பகுதியில் இருக்கும் அனைத்து கடைகளிலும், தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் காலாவதியான தரமற்ற உணவு பொருட்களை லாபத்திற்கு ஆசைப்பட்டு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
 
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget