மேலும் அறிய

கோவை : தமிழ்நாட்டை புரட்டி எடுத்த 870 கோடி ரூபாய் மெகா ஊழல்...இருவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

870.1 கோடி ரூபாய்க்கு வங்கி வைப்பாளர்களை ஏமாற்றிய வழக்கில், மார்க்கெட்டிங் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 171.74 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

870.1 கோடி ரூபாய்க்கு வங்கி வைப்பாளர்களை ஏமாற்றிய வழக்கில், பாசி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 171.74 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

மோகன்ராஜ் மற்றும் கமலவல்லி ஆகிய தனியார் நிறுவனங்களின் இயக்குநர்கள் இருவருக்கும் இருபத்தேழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா 42.76 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக சிபிஐ செய்திக் குறிப்பில்தெரிவித்துள்ளது. Paazee Forex Trading India Private Limited, Paazee Trading Inc. மற்றும் Paazee Marketing Company ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு தலா 28.74 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வைப்பாளர்களை 870.10 கோடி ரூபாய் (தோராயமாக) ஏமாற்றியது தொடர்பான இது போன்ற அரிய வழங்குகளில் இதுவும் ஒன்று என சிபிஐ தெரிவித்துள்ளது. விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 171.74 கோடி ரூபாயாகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ஜூன் 15, 2011 அன்று சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

திருப்பூரில் இயங்கி வரும் Paazee Marketing நிறுவனம், அதன் இயக்குனர் கே.மோகன்ராஜ் மற்றும் பிற தனியார் நிறுவனங்கள் உள்பட பலர் ஜூலை 2008 முதல் செப்டம்பர் 2009 வரை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதிக வட்டி தருவதாக கூறி பல்வேறு வைப்புத்தொகையாளர்களிடம் இருந்து டெபாசிட் வசூலித்து 870.10 கோடி ரூபாயை (தோராயமாக) ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. 

மேலும், www.paazeemarketing.com என்ற இணையதளத்தின் மூலம் நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள், பொதுமக்களால் செய்யப்படும் டெபாசிட்கள் மற்றும் முதலீடுகளை அந்நிய செலாவணி வர்த்தகத்தில் பயன்படுத்துவோம் என நேர்மையற்ற முறையில் உறுதியளித்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட வைப்புத்தொகைக்கு மிகக் குறுகிய காலத்தில் பெரும் ஈவுத்தொகை/வட்டி வழங்கப்படும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொய் வாக்குறுதி அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பிந்தைய தேதியிட்ட காசோலைகளை வழங்கினர்.

அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் Paazee Forex Trading India Private Limited, Paazee Trading Inc. மற்றும் Paazee மார்கெட்டிங் கம்பெனியின் பெயர்களில் கணக்குகளைத் திறந்தனர். முழுமையான விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அக்டோபர் 7, 2011 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களையும் மூன்று நிறுவனங்களையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் கண்டறிந்து அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget