மேலும் அறிய

வேலைக்கு போக சொன்ன மனைவி..! போதையில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்!

சென்னையில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திகொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (42). இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலஷ்மி (38). இவர்கள் தங்களது இரண்டு பிள்ளையுடன் வசித்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநரான தியாகராஜன் அவ்வபோது, பெயின்டர் வேலையும் செய்து வந்துள்ளார். அடிக்கடி இரண்டு வேலைக்கும் செல்லாமல் தியாகராஜன் இருந்து வந்துள்ளார். மனைவி தியாகராஜன் முறையாக ஏதாவது ஒரு வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தினாலும் அவருடன் சண்டையிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டு கொண்டுள்ளார்.

வேலைக்கு போக சொன்ன மனைவி..! போதையில்  கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்!
 
இந்நிலையில் தியாகராஜனுக்கு அவ்வப்போது இருந்து வந்த குடிப்பழக்கம் தீவிரமடையத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக குடி பழக்கத்திற்கு முழுமையாக அடிமையான தியாகராஜன் வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தியாகராஜன் மனைவி தனலஷ்மியை வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 

வேலைக்கு போக சொன்ன மனைவி..! போதையில்  கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்!
 கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த கணவன் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தி கொலை செய்துள்ளார். கணவனால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனலஷ்மியின் கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே அருகிலுள்ள கண்ணகி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 

வேலைக்கு போக சொன்ன மனைவி..! போதையில்  கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்!
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குடிபோதையில் இருந்த தியாகராஜனை கைது செய்தனர். பின்னர் தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்த கணவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget