மேலும் அறிய

ஆடிப்பெருக்கில் மீன் குழம்பு வைத்த மனைவி: கம்பியால் அடித்த கணவன்; போலீசுக்கு பயந்து தற்கொலை!

மீன் குழம்பினால் ஒரு குடும்பமே பாதிப்புக்குள்ளான சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி கிருத்திகையன்று ஏன் மீன் குழம்பு சமைத்தாய்? என மனைவியை இரும்புக்கம்பியால் தாக்கிய கணவர், போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை கொரட்டூர் அக்ரஹாரம் மூன்றாவது தெருவினைச்சேர்ந்தவர் 40 வயதான குமார். பெயிண்டராக வேலை செய்து வரும் இவருக்கு துர்கா என்ற மனைவியும், மோகன் மற்றும் ஜூவா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று ஆடிக்கிருத்திகை என்பதால் வீட்டில் பூஜைகள் எல்லாம் செய்துவிட்டு வழக்கம் போல தன்னுடைய பணிக்கு சென்றுவிட்டார் குமார். ஆனால் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்பதால் வீட்டில் மீன் குழம்பு சமைத்துள்ளார் துர்கா. இந்நிலையில் தான் பணியினை முடித்துவிட்டு குடிப்போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்  குமார். அவருக்கு  மனைவி துர்கா இரவு உணவினை எடுத்து வைத்துள்ள பொழுது, அவரது தட்டில் மீன் குழம்பினைப்பார்த்ததும், இன்னைக்கு ஆடிக்கிருத்திகைன்னு உனக்கு தெரியாதா? எதுக்கு வீட்டில் மீன் குழம்பு சமைத்தாய் என்று கேட்டு வாக்குவாததத்தில் ஈடுபட்டுள்ளார். எப்பொழுதும் போல அப்பா , அம்மா சண்டைத்தானே என்று நினைத்து இவர்களது குழந்தைகள் பக்கத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

  • ஆடிப்பெருக்கில் மீன் குழம்பு வைத்த மனைவி: கம்பியால் அடித்த கணவன்; போலீசுக்கு பயந்து தற்கொலை!

இதனையடுத்து  குழந்தைகள் ஆசைப்பட்டதால் தான் மீன் குழம்பு செய்தேன் என்று துர்கா எவ்வளவோ கூறியும், குமார் மீண்டும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த கம்பியினை வைத்து மனைவி துர்காவினை பெயிண்டர் குமார் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குமார், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றுள்ளனர். இதற்கிடையில் தான் உறவினர் வீட்டிற்கு சென்று குழந்தைகள் வீடு திரும்பிய நிலையில், துர்கா ரத்த வெள்ளத்தில் ஒருபுறமும்,  மறுபுறம் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதைப்பார்த்த குழந்தைகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். குழந்தைகளின் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் சடலமாக தொங்கிக் கொண்டிருந்த குமாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் படுகாயத்துடன் கிடந்த துர்காவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கொரட்டூர் காவல்நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

  • ஆடிப்பெருக்கில் மீன் குழம்பு வைத்த மனைவி: கம்பியால் அடித்த கணவன்; போலீசுக்கு பயந்து தற்கொலை!

 இந்த விசாரணையில், மீன் குழம்பு வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரம் அடைந்த குமார் மனைவி துர்காவை அருகில் கிடந்த கம்பியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், அதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை இறந்துவிட்டதாக நினைத்து பயந்துபோன குமார், போலீசார் விசாரணைக்கு பயந்து தனது வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.  மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
Bajaj Platina on EMI: டேங்க்க நிரப்பினா 800 கிமீ பயணம்; ரூ.2,000 EMI-ல பஜாஜ் பிளாட்டினா வாங்க முடியுமா.? பிளான் இதோ
டேங்க்க நிரப்பினா 800 கிமீ பயணம்; ரூ.2,000 EMI-ல பஜாஜ் பிளாட்டினா வாங்க முடியுமா.? பிளான் இதோ
Tiruvottiyur boat house : திருவொற்றியூர் மக்களுக்கு கொண்டாட்டம்.! வாட்டர் ஸ்கூட்டர் முதல் அக்வா ரோலர் வரை- கட்டணம் இவ்வளவு தானா.?
திருவொற்றியூர் மக்களுக்கு கொண்டாட்டம்.! வாட்டர் ஸ்கூட்டர் முதல் அக்வா ரோலர் வரை- கட்டணம் இவ்வளவு தானா.?
Embed widget