மேலும் அறிய

ஆடிப்பெருக்கில் மீன் குழம்பு வைத்த மனைவி: கம்பியால் அடித்த கணவன்; போலீசுக்கு பயந்து தற்கொலை!

மீன் குழம்பினால் ஒரு குடும்பமே பாதிப்புக்குள்ளான சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி கிருத்திகையன்று ஏன் மீன் குழம்பு சமைத்தாய்? என மனைவியை இரும்புக்கம்பியால் தாக்கிய கணவர், போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை கொரட்டூர் அக்ரஹாரம் மூன்றாவது தெருவினைச்சேர்ந்தவர் 40 வயதான குமார். பெயிண்டராக வேலை செய்து வரும் இவருக்கு துர்கா என்ற மனைவியும், மோகன் மற்றும் ஜூவா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று ஆடிக்கிருத்திகை என்பதால் வீட்டில் பூஜைகள் எல்லாம் செய்துவிட்டு வழக்கம் போல தன்னுடைய பணிக்கு சென்றுவிட்டார் குமார். ஆனால் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்பதால் வீட்டில் மீன் குழம்பு சமைத்துள்ளார் துர்கா. இந்நிலையில் தான் பணியினை முடித்துவிட்டு குடிப்போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்  குமார். அவருக்கு  மனைவி துர்கா இரவு உணவினை எடுத்து வைத்துள்ள பொழுது, அவரது தட்டில் மீன் குழம்பினைப்பார்த்ததும், இன்னைக்கு ஆடிக்கிருத்திகைன்னு உனக்கு தெரியாதா? எதுக்கு வீட்டில் மீன் குழம்பு சமைத்தாய் என்று கேட்டு வாக்குவாததத்தில் ஈடுபட்டுள்ளார். எப்பொழுதும் போல அப்பா , அம்மா சண்டைத்தானே என்று நினைத்து இவர்களது குழந்தைகள் பக்கத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

  • ஆடிப்பெருக்கில் மீன் குழம்பு வைத்த மனைவி: கம்பியால் அடித்த கணவன்; போலீசுக்கு பயந்து தற்கொலை!

இதனையடுத்து  குழந்தைகள் ஆசைப்பட்டதால் தான் மீன் குழம்பு செய்தேன் என்று துர்கா எவ்வளவோ கூறியும், குமார் மீண்டும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த கம்பியினை வைத்து மனைவி துர்காவினை பெயிண்டர் குமார் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குமார், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றுள்ளனர். இதற்கிடையில் தான் உறவினர் வீட்டிற்கு சென்று குழந்தைகள் வீடு திரும்பிய நிலையில், துர்கா ரத்த வெள்ளத்தில் ஒருபுறமும்,  மறுபுறம் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதைப்பார்த்த குழந்தைகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். குழந்தைகளின் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் சடலமாக தொங்கிக் கொண்டிருந்த குமாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் படுகாயத்துடன் கிடந்த துர்காவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கொரட்டூர் காவல்நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

  • ஆடிப்பெருக்கில் மீன் குழம்பு வைத்த மனைவி: கம்பியால் அடித்த கணவன்; போலீசுக்கு பயந்து தற்கொலை!

 இந்த விசாரணையில், மீன் குழம்பு வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரம் அடைந்த குமார் மனைவி துர்காவை அருகில் கிடந்த கம்பியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், அதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை இறந்துவிட்டதாக நினைத்து பயந்துபோன குமார், போலீசார் விசாரணைக்கு பயந்து தனது வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.  மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

.

தலைப்பு செய்திகள்

காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் அட்டூழியம்
காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் அட்டூழியம்
தஞ்சாவூரில் பெரும் அதிர்ச்சி, பரபரப்பு: ரூ.3 லட்சம் மதிப்பு கஞ்சாவுடன் பிடிப்பட்ட 2 பேர்
தஞ்சாவூரில் பெரும் அதிர்ச்சி, பரபரப்பு: ரூ.3 லட்சம் மதிப்பு கஞ்சாவுடன் பிடிப்பட்ட 2 பேர்
ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் குஜராத் வியாபாரிகள் எஸ்கேப்... வலைவீசும் கோவை போலீசார்
ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் குஜராத் வியாபாரிகள் எஸ்கேப்... வலைவீசும் கோவை போலீசார்
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Ather 450X Vs Honda Activa e: EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
iPhone 17 Discounts: சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
Embed widget