மேலும் அறிய

அமெரிக்காவிற்கு செல்ல ஆசைப்பட்ட இந்தியர்கள்! நேபாளத்திற்கு கடத்திச் சென்ற கும்பல் - நடந்தது இதுதான்!

அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி 11 இந்தியர்களை நேபாளத்திற்கு கடத்திச் சென்று அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலைக்காகவும், படிப்பிற்காகவும் பலரும் தங்களது நாடுகளில் இருந்து செல்வது வழக்கம். இந்தியாவில் இருந்தும் லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு படிப்பிற்காகவும், வேலைக்காகவும் செல்கின்றனர். அரசு வகுத்துள்ள விதிகளின்படி அனைவரும் சென்றாலும், சிலர் சட்டவிரோதமாக பல நாடுகளுக்கு ஊடுருவி வருகின்றனர்.

அமெரிக்கா செல்ல ஆசைப்பட்ட இந்தியர்கள்:

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கானோர் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் சென்று வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அமெரிக்காவிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அங்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அந்த பகுதியில் உள்ள வெளிநாடு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகளை அணுகியுள்ளனர்.

அந்த ஏஜெண்டுகளிடம் இருந்து ரூபாய் 45 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர். பின்னர், அவர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதாக கூறியுள்ளனர். பின்னர், அவர்களை நேபாளம் வழியாக அமெரிக்கா அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர். பின்னர், அவர்களை நேபாள நாட்டின் காத்மாண்டுவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆள் கடத்தல்:

அங்கு ஒரு வீட்டில் அவர்களை தங்க வைத்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவர்களை அழைத்துச் சென்றவர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு மாத காலமாகியும் அவர்களை அந்த கும்பல் வெளியில் விடாமல் அடைத்து வைத்துள்ளது. அப்போதுதான் தாங்கள் ஆள் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு இருந்ததை அவர்கள் அறிந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

பின்னர், இதுதொடர்பாக தகவல் அறிந்து அந்த நாட்டு காவல்துறையினர் காத்மாண்டில் உள்ள ரதோபுல் பகுதியில் இருந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 11 இந்தியர்களையும் மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் ஆண்கள் ஆவார்கள்.

மீட்கப்பட்ட இந்தியர்கள்:

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏஜெண்டுகள் 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த போலி ஏஜெண்டு வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றி ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேபாளத்தில் மீட்கப்பட்ட இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணியில் அதிகாரிகளும் போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த ஆள்கடத்தலில் யாருக்கு தொடர்பு இருக்கிறது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்ற விசாரணையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடு செல்ல நினைத்த இந்தியர்களை போலி ஏஜெண்டுகள் கடத்த முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget