மேலும் அறிய

Kanchipuram Encounter | நகை பறிப்பு முயற்சி.. தேடுதல் வேட்டை.. காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் நடந்தது எப்படி?

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் கொள்ளையன் ஒருவரை போலீசார் என்கவுண்டர்... நடந்தது எப்படி?

 ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய போலிஸார், கொள்ளையர்களில் ஒருவனை இன்று என்கவுன்டர் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். விவசாயி கூலி வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்து விட்டதால், இந்திராணி(58) மறுமணம் செய்து கொண்டார். இவர், நேற்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சகோதரியை பார்க்க, சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை பென்னலூர் ஈபி பஸ் நிறுத்தத்தில் காலை 8.30 மணிக்கு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு வடமாநில இளைஞர்கள் இந்திராவிடம் முகவரி கேட்பதுபோல் நைசாக பேச்சு கொடுத்துள்ளனர்.


Kanchipuram Encounter | நகை பறிப்பு முயற்சி.. தேடுதல் வேட்டை.. காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் நடந்தது எப்படி?

அப்போது இந்தி, தமிழ் என மாறிமாறி பேசியுள்ளனர். அதில், ஒருவன் இந்திரா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளான். சுதாரித்துக்கொண்ட இந்திரா செயினை கையில் பிடித்துக் கொண்டு மர்ம நபர்களிடம் போராடி உள்ளார். மேலும், இந்திரா கூச்சலிட்டதால், அதில் ஒருவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளான். இதனால், அதிர்ச்சி அடைந்த இந்திரா திகைத்து நின்றுள்ளார். பின்னர், இந்திரா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருங்காட்டுக்கோட்டை ஏரியை நோக்கி தப்பி ஓடி உள்ளனர்.

பின்னர், இந்திரா கூச்சலிட, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு இந்திராவிடம் விசாரித்துள்ளனர். பின்னர், தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

Kanchipuram Encounter | நகை பறிப்பு முயற்சி.. தேடுதல் வேட்டை.. காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் நடந்தது எப்படி?

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட துப்பாக்கியின் தோட்டாக்கள் கீழே சிதறிக் கிடந்து உள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் எஸ்.பி., சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ வந்து விசாரணை நடத்தினர். இதில், 30 முதல் 35 வயதான வடமாநில இளைஞர்கள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மர்ம நபர்கள், கடந்த 3 நாட்களாக அதே பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளனர் என்றும், விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து காவல்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடி வந்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை  துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு கொள்ளையனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். என்கவுன்டரில் பலியான கொள்ளையன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்கஷா என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஏரியில் பதுங்கி இருந்த 2-வது கொள்ளையன் நைம் அக்தர் கைது செய்த போலீஸார் அவர்  அளித்த தகவலின் அடிப்படையில் மற்றொரு கொள்ளையன் முர்தஷாவை போலீஸார் தேடி வருகின்றனர்.


Kanchipuram Encounter | நகை பறிப்பு முயற்சி.. தேடுதல் வேட்டை.. காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் நடந்தது எப்படி?

குற்றவாளியை பிடிக்க முயன்ற பொழுது,  குற்றவாளி தாக்கியதால் இரண்டு காவலர்களுக்கு பல்வேறு இடங்களில் வெட்டு. தற்போது ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் மோகன்தாஸ் மற்றும் மற்றொரு காவலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டா பெண் பிரபலம் கொடூர கொலை! தூக்கில் தொங்கிய கணவன் - சென்னையில் நடந்தது என்ன?
இன்ஸ்டா பெண் பிரபலம் கொடூர கொலை! தூக்கில் தொங்கிய கணவன் - சென்னையில் நடந்தது என்ன?
சிக்கன் கறி தகராறு ; கணவனை கழுத்தறுத்துக் கொன்ற மனைவி !! அரிவாளால் வெட்டிய பயங்கரம்
சிக்கன் கறி தகராறு ; கணவனை கழுத்தறுத்துக் கொன்ற மனைவி !! அரிவாளால் வெட்டிய பயங்கரம்
" நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம் " மகனுக்கு வந்த மெசேஜ் !! தாய் அரிவாளால் வெட்டிக் கொலை
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்
Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்
Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?
Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?
Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
TVK VIJAY : ‘இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக உறுதியளித்தாரா விஜய்?’ போர்க்கொடித் தூக்கும் அமைப்புகள்..!
இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக எழுதிக்கொடுத்தாரா விஜய்?
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
Embed widget