சூளகிரியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு!
சூளகிரியில் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சினிமாவில் சித்தரிப்பதைப் போன்று விபத்து நடைப்பெற்றது. இந்த கோர விபத்தில் 2 நபர்கள் உயிரிழப்பு . கர்நாடக மாநிலம் பெங்களூரு வயாலிகாவல் பகுதியை சேர்ந்த சத்யபிரசாத் மகன் சுமந்த் வயது ( 30). இவர், தனியார் தொழிற் சாலையில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். காலையில் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தனது நண்பரை பார்க்க காரில் வந்தார்.
அப்போது சூளகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் சென்ற போது கார் திடீரென ஒட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. சாலையில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு சென்ற கார், சாலையில் மற்றொரு புறத்துக்குள் நுழைந்து சாலையின் நடுவே ஓடியது

அந்த வழியாக பெங்களூரை நோக்கி சென்ற காரும், சுமந்த் வந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன . இதில் 2 கார்களும் தூக்கி வீசப்பட்டதுடன் அப்பளம் போல் நொறுங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் இந்த பயங்கர விபத்து நடைப்பெற்றது.
இதில் சுமந்த், எதிரே வந்த காரில் இருந்தவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த சூளகிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் இறந்த 2 நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி நொறுங்கிய கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், எதிரே வந்த காரில் இருந்தவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் வின்சென்ட் கோபி வயது (34) என்பதும், இவர் பெங்களூரு கோரமங்களாவில் டாக்சி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இவர், சொந்த ஊருக்கு வந்து விட்டு பெங்களூரு சென்ற போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இறந்த சுமந்துக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. நைய்னா வயது (24) என்ற மனைவி உள்ளார். பலியான வின்சென்ட் கோபிக்கு மரியா என்ற மனைவியும், செபின் வயது (10), ஆல்ஸ்டின் வயது (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
என் குடும்பத்திலும் தற்கொலை - நீட் குறித்து சாய் பல்லவி! NEET Suicide | Sai Pallavi | NEET Exam
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்






















