மேலும் அறிய

அதிர்ச்சி.. ரத்தத்துக்கும் லஞ்சமா? க்ளூகோஸ் நீரில் சிவப்பு மருந்து கலந்து ஏற்றிய அரசு மருத்துவமனை..

உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனை ஒன்றில், ரத்தத்தை மாற்றுவதற்கான சிகிச்சைக்குப் பதிலாக மருத்துவப் பணியாளர் ஒருவர் க்ளூகோஸ் நீரில் சிவப்புநிற மருந்தைக் கலந்து நோயாளிக்கு ஏற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றில், ரத்தத்தை மாற்றுவதற்கான சிகிச்சைக்குப் பதிலாக மருத்துவப் பணியாளர் ஒருவர் க்ளூகோஸ் நீரில் சிவப்பு நிற மருந்தைக் கலந்து நோயாளிக்கு ஏற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மஹோபா சாதர் தாலுக்காவைச் சேர்ந்த பாந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டி ராம்குமாரி தன் மகன் ஜுகல் என்பவரோடு வாழ்ந்து வருகிறார். அவரது கணவர் உயிருடன் இல்லை. தன் மகன் ஜுகலுக்கு நோய் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ராம்குமாரி. மஹோபா மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

அதிர்ச்சி.. ரத்தத்துக்கும் லஞ்சமா? க்ளூகோஸ் நீரில் சிவப்பு மருந்து கலந்து ஏற்றிய அரசு மருத்துவமனை..

இந்நிலையில், மஹோபா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர் ஒருவர் ராம்குமாரியிடம் ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மூதாட்டி ராம்குமாரி தன் நகைகளை விற்பனை செய்து, பணத்தைத் தயார் செய்துள்ளார். தொடர்ந்து தன் மகனின் ரத்த மாற்று சிகிச்சைக்காக ரத்தம் பெறுவதற்காக மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்கியுள்ளார். 

எனினும், ராம்குமாரியிடம் லஞ்சமாகப் பணம் பெற்ற மருத்துவப் பணியாளர் ரத்தத்திற்குப் பதிலாக, நோயாளியான ஜுகலுக்கு வழங்கப்பட்ட க்ளூகோஸ் நீரில் சிவப்பு நிறத்திலான மருந்தைக் கலந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளி ஜுகலின் உடல்நிலை மோசமாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மஹோபா மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அவரை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. தான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் தன் மகனைக் கொண்டு வந்திருப்பதாகவும் மூதாட்டி ராம்குமாரி செய்தியாளர்களிடம் வருத்ததோடு தெரிவித்துள்ளார். 

அதிர்ச்சி.. ரத்தத்துக்கும் லஞ்சமா? க்ளூகோஸ் நீரில் சிவப்பு மருந்து கலந்து ஏற்றிய அரசு மருத்துவமனை..

இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள தலைமை மருத்துவக் கண்காணிப்பாளரும், மருத்துவருமான ஆர்.பி.மிஷ்ரா, `இந்த விவகாரம் தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு குழு ஒருங்கிணைக்கப்பட்டு, விசாரிக்க கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. ராம்குமாரியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் மருத்துவப் பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget