மேலும் அறிய

15 வயதிலிருந்து ஹேக்கிங்.. போலீஸ் காவலில் தற்கொலை முயற்சி.. Bulli Bai App நீரஜ் குறித்து அதிர்ச்சி தகவல்கள்..

இந்தியா, பாகிஸ்தானில் பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் இணையதளங்களை இவர் ஹேக் செய்திருக்கிறார்

புல்லி பாய் எனும் செயலியில் கடந்த ஒன்றாம் தேதி பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், இஸ்லாமிய பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாக அந்த செயலியில் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் புல்லி பாய் செயலியின் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா (இந்துத்துவா ஆதரவாளர்), ஸ்வேதா சிங், மயங்க் ராவல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


15 வயதிலிருந்து ஹேக்கிங்.. போலீஸ் காவலில் தற்கொலை முயற்சி.. Bulli Bai App நீரஜ் குறித்து அதிர்ச்சி தகவல்கள்..

இதனையடுத்து புல்லி பாய் செயலியின் மாஸ்டர் மைண்டான 21 வயது நிரம்பிய நீரஜ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாமில் பதுங்கியிருந்த இவரை டெல்லி சிறப்பு படை போலீஸார் கைது செய்தனர்.   அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

விசாரணையில், இந்த செயலி உண்மையில் நவம்பரில் உருவாக்கப்பட்டது என்றும், டிசம்பர் 31 ஆம் தேதி பொதுவெளியில் பரவியது என்றும், அதன்பின் மும்பை காவல்துறையை கேலி செய்ய பயன்படுத்திய @giyu44 டிவிட்டர் பக்கத்தையும் பிஷ்னோய் உருவாக்கியதாக கூறப்படுகிறது.


15 வயதிலிருந்து ஹேக்கிங்.. போலீஸ் காவலில் தற்கொலை முயற்சி.. Bulli Bai App நீரஜ் குறித்து அதிர்ச்சி தகவல்கள்.. 

அவர் தனது ட்வீட்டில் மும்பை காவல்துறையை "ஸ்லம்பாய் போலீஸ்" என்று குறிப்பிட்டார். மேலும்,  தனது செயல்களுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும், தான் சரி என்று நினைத்ததைச் செய்ததாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதுமட்டுமின்றி போலீஸ் காவலில் அவர் இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. 

15 வயது முதலே ஹேக்கிங் குறித்து நீரஜ் படித்து வந்தது தெரியவந்தது. அதோடு, இந்தியா, பாகிஸ்தானில் பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் இணையதளங்களை இவர் ஹேக் செய்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

நீரஜின் தந்தை தஷ்ரத் பிஷ்னோய் கூறுகையில், "என் மகன் பத்தாம் வகுப்பில் 86% மதிப்பெண் எடுத்ததால் அசாம் அரசு அவனுக்கு லேப்டாப் கொடுத்தது. எந்நேரமும் அதிலேதான் இருப்பார்.


15 வயதிலிருந்து ஹேக்கிங்.. போலீஸ் காவலில் தற்கொலை முயற்சி.. Bulli Bai App நீரஜ் குறித்து அதிர்ச்சி தகவல்கள்..

அதனை அவன் படிப்புக்காக பயன்படுத்தினான். ஜோர்ஹட்டில் உள்ள எங்கள் அண்டைவீட்டாரிடம் கூட கேட்டு பாருங்கள், என் மகன் நன்றாக படிக்க கூடியவன். அவன் இரவு பகலாக லேப்டாப்பின் முன்னே அமர்ந்திருப்பான்.

அதில் அவன் என்ன செய்கிறான் என்பது எதுவும் எங்களுக்கு தெரியாது, ஆனால் இவர்கள் குற்றம் சாட்டும் எதையும் என் மகன் செய்திருக்க மாட்டான்" என்று கூறினார். இந்த வழக்கை விசாரிக்கும் டிசிபி மல்ஹோத்ரா, "இந்த ஆப்பை கிட்ஹப்பில் உருவாக்கியது நீரஜ் தான், @bullibai_ ட்விட்டர் ஐடியும் மற்ற சமூக வலைதள ஐடிக்களும் தன்னால்தான் உருவாக்கப்பட்டது என்று நீரஜே ஒத்துக்கொண்டுள்ளார்", என்றார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி!
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
Ramya Bharathi IPS : ’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
Iran on Hormuz: நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
Arun IPS : ’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
School Reopening: பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
CM Vijay: குற்றங்கள் நடக்க கூடாது, வேகமான விசாரணை, கடும் தண்டனை - காவல்துறைக்கு CM விஜய் உத்தரவு
CM Vijay: குற்றங்கள் நடக்க கூடாது, வேகமான விசாரணை, கடும் தண்டனை - காவல்துறைக்கு CM விஜய் உத்தரவு
Embed widget