மேலும் அறிய

கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் விஷவாயு கசிவு - 3 பேர் மயக்கம்

பத்து தினங்களாக தேங்கியிருந்த நிலையில் திடீரென ஆவி போல் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால்  இரண்டு நபர்களும் மயக்கமடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம், புகழூர் பகுதியில் தனியார் (ஈ.ஐ.டி. பாரி) சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200 மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 


கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் விஷவாயு கசிவு - 3 பேர் மயக்கம்

 

இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், விடுமுறை முடிந்த பிறகு அனைவரும் சர்க்கரை ஆலைக்கு வேலைக்கு வந்துள்ளனர்.  பல நாட்களாக சர்க்கரை ஆலை இயங்காமல், இயந்திரம் செயல்படாத இருந்த நிலையில் இயந்திரத்தின் உள்ளே கரும்பு சக்கைகள், கரும்பு சார் இருந்துள்ளது.

 


கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் விஷவாயு கசிவு - 3 பேர் மயக்கம்

 

 


அதை அப்புறப்படுத்த ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் முசிறியைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 27), சேலத்தைச் சேர்ந்த சதீஷ் (25) ஆகியோர் முயற்சித்தனர். பத்து தினங்களாக தேங்கியிருந்த நிலையில் திடீரென ஆவி போல் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால்  இரண்டு நபர்களும் மயக்கமடைந்துள்ளனர். அப்போது அந்த இடத்திகு  வந்த ஆலை பிராசசிங் அதிகாரி அவர்களை மீட்க முற்ப்பட்டனர். அப்போது அவரையும் விஷவாயு தாக்கியதில் மூன்று நபர்களும் மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக மூவரையும் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 


கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் விஷவாயு கசிவு - 3 பேர் மயக்கம்

ஆலையின் அபாய சங்கு தொடர்ந்து மூன்று முறை ஒழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் ஒன்று கூடும்படி அதிகாரிகள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உரிய நேரத்தில் வாயு கசிவு சரி செய்யப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


 குடும்ப தகராறு விவசாயி தற்கொலை.

தென்னிலை அருகே, குடும்பத்தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம், தென்னிலை, கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த, பழனிச்சாமி மகன் கார்த்திக் விவசாயி. இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த, குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து கார்த்திக், ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்தி உயிரிழந்தார். இது குறித்து கார்த்திக்கின் சகோதரர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


மது, கள் விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது .

கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது,கள் விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் ,மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சட்டம் ஒழுங்கு போலீசார் வாங்கல், குளித்தலை, பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில் கல் விற்பனை செய்ததாக பெரியசாமி, முத்து, செந்தில்குமார், ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 16 மது பாட்டில்கள் 10 லிட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


கரூர் அருகே ரேஷன் அரிசி பறிமுதல் இரண்டு பேர் கைது.

கரூர் அருகே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். கரூர் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் எஸ்ஐ கணேசன் உள்ளிட்ட போலீசார் லாலாபேட்டை, பள்ளாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலையாளி கோவில் அருகே 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜன், முருகானந்தம், ஆகிய இருவரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS : அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget