மேலும் அறிய

காதலிக்கு நேர்ந்த அவமானம்: நண்பன் பீர் பாட்டிலால் குத்தி கொடூர கொலை - நடந்தது என்ன?

புதுச்சேரியில் காதலியை ஆபாச வார்த்தையால் திட்டியதால் ஆத்திரத்தில் சக நண்பனை பீர் பாட்டிலால் குத்திக் கொலை.

புதுச்சேரி: புதுச்சேரியில் காதலியை தகாத வார்த்தையால் திட்டியதால் ஆத்திரம் அடைந்து, சக நண்பனை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பன் பீர் பாட்டிலால் குத்தி கொலை

புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் என்கிற அப்பு. இவர் கடந்த வெள்ளி நேற்று முன்தினம் இரவு பெத்துசெட்டிபேட்டை, கொல்லிமேடு மைதானத்தில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பிரதாப்பின் தாயார் நவநீதம் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரதாப் அவரது நண்பரான ரவுடி மண்ணெண்ணெய் வினோத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்ற போது இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. பிறந்தநாள் விழாவில் பெத்துச்செட்டிபேட் பகுதியை சேர்ந்த பழனிமுருகன் மற்றும் நெருப்பு குமார், வினோத் ஆகியோருடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, வில்லியனூரில் தலைமறைவாக இருந்த பழனிமுருகன், கிருஷ்ணகுமார், வினோத் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 3ம் தேதி வினோத்தின் பிறந்தநாளையொட்டி மேட்டுப்பாளையம் கனரக வாகனம் நிறுத்துமிடத்தில் பிரதாப், வினோத், பழனிமுருகன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது, பிரதாப்பிற்கும், பழனி முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதாப் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பிரதாப் கடுமையாக பேசியது பழனி முருகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்படியாவது பிரதாப்பை கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு பிரதாப்பை மீண்டும் மதுஅருந்த அழைத்து இருக்கிறார். பெத்துசெட்டிபேட்டை மைதானத்திற்கு வந்த பிரதாப் போதை தலைக்கேற மது அருந்தி இருக்கிறார்.

வெடிகுண்டு வீசியது மற்றும் அடிதடி வழக்கு

அப்போது, பழனிமுருகன், தனது காதலியை பார்க்க செல்ல பிரதாப்பிடம் டு வீலர் கேட்டுள்ளார்.  அதற்கு பிரதாப் கொடுக்க மறுத்ததோடு பழனி முருகனின் காதலியை தகாத வார்த்தையால் திட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பழனிமுருகன் மது பாட்டிலால் பிரதாப்பின் தலையில் அடித்து, உடைந்த பாட்டிலால் அவரது வயிற்றில் குத்தி இருக்கிறார். இதில் சரிந்து விழுந்த பிரதாப்பை கிருஷ்ணகுமார் மற்றும் வினோத் ஆகியோர் இணைந்து சரமாரியாக பாட்டில்களால் குத்தி, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், உயிரிழந்த பிரதாப் மீது வெடிக்குண்டு வீசியது மற்றும் அடிதடி வழக்கும், கைதான வினோத், பழனிமுருகன், கிருஷ்ணகுமார் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
RSS: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா? கன்டிஷன் போட்ட மோகன் பகவத்
RSS: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா? கன்டிஷன் போட்ட மோகன் பகவத்
Sabarimala: ஐயப்ப பக்தர்களே... சபரிமலைக்கு போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
Sabarimala: ஐயப்ப பக்தர்களே... சபரிமலைக்கு போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
Ration Shop: ரேஷன் கடையில் கோதுமை எப்போது கிடைக்கும்.! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு
ரேஷன் கடையில் கோதுமை எப்போது கிடைக்கும்.! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
RSS: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா? கன்டிஷன் போட்ட மோகன் பகவத்
RSS: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா? கன்டிஷன் போட்ட மோகன் பகவத்
Sabarimala: ஐயப்ப பக்தர்களே... சபரிமலைக்கு போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
Sabarimala: ஐயப்ப பக்தர்களே... சபரிமலைக்கு போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
Ration Shop: ரேஷன் கடையில் கோதுமை எப்போது கிடைக்கும்.! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு
ரேஷன் கடையில் கோதுமை எப்போது கிடைக்கும்.! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு
Mahindra XEV 9S: ப்ரீமியமும், டெக்கும் சேர்ந்த கார் இப்படிதான் இருக்கும்..! கலங்கும் போட்டியாளர்கள், கலக்கும் மஹிந்த்ரா
Mahindra XEV 9S: ப்ரீமியமும், டெக்கும் சேர்ந்த கார் இப்படிதான் இருக்கும்..! கலங்கும் போட்டியாளர்கள், கலக்கும் மஹிந்த்ரா
Vaali:
Vaali: "நான் எலும்புக்கு வாலாட்டும் நாய்.." கவிஞர் வாலி அப்படி சொன்னது ஏன்?
Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Embed widget