மேலும் அறிய

வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி

ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் புதிய வாகனத்தின் பூஜை முடிந்து குடும்பத்தினர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். 

ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் புதிய வாகனத்தின் பூஜை முடிந்து குடும்பத்தினர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. 8 பேர் பயணம் செய்த SUV கார் பர்மனப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது அத்தங்கி-நார்கெட்பள்ளி நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம்டைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

உயிரிழந்தவர்கள் பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம் காவாலி மண்டலத்தில் உள்ள சிரிபுரத்தைச் சேர்ந்த டி.சுரேஷ், வனிதா, யோகுலு மற்றும் வெங்கடேஸ்வரலு என அடையாளம் காணப்பட்டனர். மேலும், காயமடைந்தவர்கள் பிடுகுரல்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் யு.பிரனய், ஆதிலட்சுமி, ஸ்ரீனிவாஸ் ராவ் மற்றும் கௌசல்யா என அடையாளம் காணப்பட்டனர். வாகனத்தை ஓட்டி வந்த சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அத்தங்கி-நார்கட்பள்ளி நெடுஞ்சாலையில் சனிக்கிழமையன்று, தெலுங்கானாவில் உள்ள கொண்டகட்டு ஆஞ்சநேயசுவாமி கோயிலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அங்கு பயணிகள் தங்கள் புதிய காருக்கு பூஜை செய்யச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு புதிய கார் வாங்கிய மகிழ்ச்சி ஒரு மாதத்திற்குள் ஒரு குடும்பத்திற்கு இருளாக மாறியது.

விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சீனிவாச ராவ் பார்வையிட்டார். ஓட்டுநர் வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகவும், தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

“கொண்டகட்டு ஆஞ்சநேயசுவாமி கோவிலில் வழிபாடு செய்துவிட்டு, தங்கள் சொந்த கிராமமான சிரிபுரம் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது,” என்று பிடுகுரல்லா கிராமப்புற நிலைய சப் இன்ஸ்பெக்டர் மோகன் தெரிவித்தார்.

பல்நாடு மாவட்டத்தில் மற்றொரு சம்பவத்தில், சட்டெனப்பள்ளி நகரின் புறநகரில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டார்.

நகரில் உள்ள ரங்கா காலனியை சேர்ந்த டி.ரமாதேவி என்பவரே பலியானார். விவசாய நிலத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

திருமணத்துக்கு மீறிய உறவுகளே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்” போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
Telangana: தேர்தல் வாக்குறுதி.. ஒரே வாரத்தில் 500 தெரு நாய்களை கொன்ற அதிகாரிகள்!
Telangana: தேர்தல் வாக்குறுதி.. ஒரே வாரத்தில் 500 தெரு நாய்களை கொன்ற அதிகாரிகள்!
Embed widget