மேலும் அறிய

மயிலாடுதுறை : மதுபோதையில் கத்தியுடன் செய்தியாளர்களைத் துரத்திய வனக்காவலர்கள் : என்ன நடந்தது?

சீர்காழி வனத்துறை அலுவலத்தில் மதுபோதையில் வனகாவலர்கள் இடையே ஏற்பட்ட தகராறை செய்தி சேகரித்த செய்தியாளரை கத்தியுடன் துரத்தி தாக்க முயற்சித்த வன காவலர்களால் சீர்காழியில் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் தொற்று பரவலுக்கு ஏற்றவாறு மாவட்டங்களுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக தொற்று அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களில் அரசு மதுபான கடையான டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுவிற்கு அடிமையான மது பிரியர்கள், மது போதைக்கு மது கிடைக்காமல் தங்களை போதையில் வைத்துக்கொள்ள பல்வேறு மாற்று வழிகளை தேடி வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் பல இடங்களில் கள்ளச்சாராயம் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதைக்கு அடிமையான சிலர் பெயிண்டில் கலக்கப்படும் தின்னர் என்ற வேதிப்பொருளில் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து குடித்து உயிர் இழந்த சம்பவமும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது.


மயிலாடுதுறை : மதுபோதையில் கத்தியுடன் செய்தியாளர்களைத் துரத்திய வனக்காவலர்கள் : என்ன நடந்தது?

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என பல கள்ளச்சாராய கும்பலை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் ஆங்காங்கே கைது செய்யும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இருப்பினும் காவல்துறை கண்களில் மண்ணைத் தூவும் விதமாக கள்ளச்சாராய விற்பனை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும் பெரும்பாலான கள்ளச்சாராயம், பதுக்கல்களும் தயாரிப்பதும் வனத்துறை பகுதிகளில் நடைபெற்று வருவதும் வழக்கமாக உள்ள நிலையில், வனத்துறை காவலர்கள் அவர்களிடம் மது வாங்கி கொண்டு இதனை கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டிவரும் சூழலில், அதற்கு உதாரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்பாதியில் நகர் பகுதியில் குடியிருப்புகள் மத்தியில் இயங்கி வரும் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் இரவு வேளையில் அலுவலகத்தில் மது அருந்திவிட்டு அவர்களுக்குள் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதை தொடர்கதையாக வைத்துள்ளனர். அவ்வாறு நேற்றிரவு அங்கு பணியாற்றும் வனக் காப்பாளராக பணியாற்றி வரும்  நடேசன் அலுவலகத்தை பாதுகாக்க இரவு பணிக்கு வந்துள்ளார். 


மயிலாடுதுறை : மதுபோதையில் கத்தியுடன் செய்தியாளர்களைத் துரத்திய வனக்காவலர்கள் : என்ன நடந்தது?

இரவு பணிக்கு வந்த நடேசனிடம்  சக வனகாவலர்கள் முத்துகிருஷ்ணன்,கலையரசன்,துளசிமலை ஆகியோர் தேக்கு மரம் காணாமல் போனதாக கூறி வாக்குவாதம் செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றி அலுவலகத்தை விட்டு சாலையில் வந்து அருவருக்கத்தக்க வார்த்தையில் பேசி சண்டையிட்டுள்ளனர். இதனை அறிந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் இந்த காட்சிகளை தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த. வனக்காலர் நடேசன் கையில் கத்தியுடன் விரட்டியதுடன், கற்களை வீசியும் தாக்க முயன்றுள்ளார். இதில் செய்தியாளர் அதிஷ்டவசமாக தப்பினார். இதனையடுத்து சக வனகாவலர்கள் இனைந்து செய்தியாளரை மிரட்டியதுடன் தரக்குறைவாகவும் பேசியுள்ளனர். நாள்தோறும் இவர்கள் குடிபோதையில் சன்டையிடுவதும் கேள்வி கேட்கும் அக்கம்பக்கத்தினரை மிரட்டுவதும் தொடர்கதையாக உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த சீர்காழி போலீசார் போதை வனக்காவலர்களை எச்சரித்து அப்புறப்படுத்தினர்.


மயிலாடுதுறை : மதுபோதையில் கத்தியுடன் செய்தியாளர்களைத் துரத்திய வனக்காவலர்கள் : என்ன நடந்தது?

மேலும் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படாத சூழலில் வனத்துறை ஊழியர்களுக்கு எவ்வாறு மது கிடைத்தது, கள்ளச்சந்தையில் வனப்பகுதிகளில் மது பதுக்கலில் ஈடுபடுபவர்களுக்கு  இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என காவல்துறையினர் உரிய விசாரணை இவர்களிடம் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!  
தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!  
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் !! கருவைக் கலைக்கத் துடிக்கும் தந்தை - இளம்பெண் புகார்
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் !! கருவைக் கலைக்கத் துடிக்கும் தந்தை - இளம்பெண் புகார்
Kovai Child Murder Case: சூலூர் சிறுமி மரண வழக்கில் சிக்கிய அரக்கர்கள்... கோவையை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்...
Kovai Child Murder Case: சூலூர் சிறுமி மரண வழக்கில் சிக்கிய அரக்கர்கள்... கோவையை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்...
Kovai Girl murder case : கோவை சிறுமி கொலை.! 2 குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? வெளியான ஷாக் தவகல்
கோவை சிறுமி கொலை.! 2 குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? வெளியான ஷாக் தவகல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
TN Govt Power Cut: நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
Vijay vs Eps : வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
TVK VIJAY: ”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
Embed widget