மேலும் அறிய

Krishnagiri: கிருஷ்ணகிரி ஆணவக்கொலை; கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் - அனுசுயா குடும்பத்தினர் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை விவகாரத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை விவகாரத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் கோரிக்கை:

கிருஷ்ணகிரி ஆணவக் கொலை விவகாரத்தில் படுகாயமடைந்த அனுசுயா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும், இனி ஆணவக் கொலை எண்ணம் யாருக்கும்  வராத வகையில் தண்டனை வழங்க வேண்டும் என அனுசுயாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதல் திருமணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது,  அதே நிறுவனத்தில் பணியாற்றிய அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்பவர் உடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து,  கடந்த 27-ம் தேதி திருப்பூரில் உள்ள சுபாஷ் மற்றும் அனுசுயா கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பாட்டி வீட்டில் தஞ்சம்:

இதையடுத்து சுபாஷ் மனைவியுடன் தனது சொந்த ஊரான அருணபதிக்கு வந்துள்ளார். ஆனால் அவர்களை தண்டபாணி வீட்டில்சேர்க்க மறுத்துள்ளார். இதனால் அங்கு பெரும் வாக்குவாதமே ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுமண தம்பதி செய்வதறியாமல் திகைத்து நின்றபோது சுபாஷின் பாட்டி கண்ணம்மா அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுத்தார். தன்னுடைய பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டு வந்த மகனுக்கு, தனது தாய் கண்ணம்மா அடைக்கலம் கொடுத்த செய்தி தண்டபாணிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

இரட்டைக் கொலை:

 தனது தாய் கண்ணம்மா வீட்டிற்கு அதிகாலையில் சென்ற தண்டபானி,  தன் பேச்சை மீறி திருமணம் செய்துகொண்ட சுபாஷை வெளியே அனுப்பாமல் ஏன் அடைக்கலம் கொடுத்தாய் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷையும், கண்ணம்மாவையும் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த மருமகள் அனுசுயாவையும் அவர் சரமாரியாக வெட்டினார்.

இதில் சுபாஷும், கண்ணம்மாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருமகள் அனுசுயா ரத்த வெள்ளத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். உடனே தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அனுசுயாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய அக்கம்பக்கத்தினர், அனுசுயாவை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளி கைது:

தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா எட்வின் சம்பவ இடம் வந்து பார்வையிட்டார். தொடர்ந்து, ஆணவக் கொலை செய்த தண்டபாணியை விரைவில் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அவர்கள் தண்டபானியை தீவிரமாக தேடி வந்தனர்.  இந்நிலையில், இரட்டை ஆணவக்கொலை செய்து தலைமறைவாக இருந்த தண்டபாணியை அரூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, அனுசுயாவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Tiago Vs Grand i10 Nios: டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
Tata Sumo Next Generation: புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Embed widget