மேலும் அறிய

ABP Nadu Exclusive: டெல்லியில் இருந்து 25 ஆண்டுகளாக நடைபெற்ற கடத்தல்.. சாராய சிண்டிகேட் சிக்கியது எப்படி..?

பிரச்னையே இல்லாமல் 25 ஆண்டுகாலம் கள்ளச் சாராயம் கடத்திய கும்பலை செங்கல்பட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

40 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம்..
 
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக செங்கல்பட்டு அருகே, சுமார் 40 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயம் கடத்தியவர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். கள்ள சாராயம் கடத்தி வந்த நபர்கள் காவல் துறையை கண்டவுடன் வாகனத்தை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். பல வருடங்கள் கழித்து, ஒரே நேரத்தில் 40 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயம் பிடிப்பட்டது செங்கல்பட்டு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

ABP Nadu Exclusive: டெல்லியில் இருந்து 25 ஆண்டுகளாக நடைபெற்ற கடத்தல்.. சாராய சிண்டிகேட் சிக்கியது எப்படி..?
 
ஒரு மாதம் சுற்றித்திரிந்த காவல்துறை 
 
கள்ளச்சாராயத்தை கடத்தியவர்கள் யார், இதன் பின்னணியில் மிகப் பெரிய கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து, கலால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஒரு மாத தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டைக்கு பிறகு நான்கு நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 4 பேர் கைது நடவடிக்கை பின்னால் டெல்லியை சேர்ந்த மிகப் பெரிய கும்பல் இருப்பதும், சுமார் 25 ஆண்டுகாலம் இதேபோல நூதன முறையில் கள்ளச்சாராயத்தை கடத்தி வந்ததும் காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 
டெல்லியில் இருந்து கிளம்பிய சாராயம்
 
டெல்லியை சேர்ந்த சண்டு பாய் என்பவர் கரும்பு சக்கையை எடுத்து வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதன் மூலம் அரியானா உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயத்தை உருவாக்கி,  தென்னிந்தியாவில் பல பகுதிகளில் சாராய வியாபாரம், ஹோல்சேல் முறையில் செய்து வந்துள்ளார். அவருக்குக் கீழே 3 ஸ்டார் ஓட்டல் வைத்து நடத்தி வரும் பெங்களூரை சேர்ந்த லோகேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு சுமார் 100 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். லோகேஷ்  புதுச்சேரியை மையமாகக் கொண்டு, சாராய வியாபாரத்தை செய்து வந்துள்ளார். 
 

ABP Nadu Exclusive: டெல்லியில் இருந்து 25 ஆண்டுகளாக நடைபெற்ற கடத்தல்.. சாராய சிண்டிகேட் சிக்கியது எப்படி..?
 
கள்ளச்சாராயம் சிண்டிகேட்
 
வடஇந்தியாவிலிருந்து வரும் கள்ளச்சாராயத்தை தமிழ்நாடு எல்லை வரை பாதுகாப்பாக கொண்டு வந்து, புதுச்சேரியில் வசித்து வரும், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த வேலு செட்டி என்பவரிடம் ஒப்படைத்து விடுவார். இதனையடுத்து வேலு சட்டி தமிழ்நாட்டில் இருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பாண்டிச்சேரிக்கு கொண்டு சேர்த்துவிடுவது வேலு செட்டியின் வேலையாக இருந்து வந்துள்ளது. அங்கிருந்து பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த, ராஜா கள்ளச்சாராயத்தை பெற்றுக் கொண்டு, பாண்டிச்சேரி உள்ளூரில் வியாபாரம் மேற்கொள்வது வாடிக்கையாக உள்ளது. இதை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருவதாக காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 

ABP Nadu Exclusive: டெல்லியில் இருந்து 25 ஆண்டுகளாக நடைபெற்ற கடத்தல்.. சாராய சிண்டிகேட் சிக்கியது எப்படி..?
 
ஒரு லோடு 35 லட்சம்
 
ஒரு லோடு  சுமார் 35 லட்ச ரூபாய் வரை விலை போகிறது. ஒரு லாரியில் லாபம் மட்டும் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாதம் இரண்டு அல்லது மூன்று முறை , கள்ளச்சாராயத்தை இவ்வழியாக கடத்திச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக லாரியில் கள்ளச்சாராயம் செல்லும்பொழுது, முன்னே ஒரு வாகனம், பின்னே ஒரு வாகனம் என பாதுகாப்புடன் சென்றுள்ளது. இரும்பு கடையில் இருந்து பயன்படுத்த முடியாத லாரியை விலைக்கு வாங்கி, அதை சீர் செய்து  பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
ஹவாலா பணம்
 
பணமானது அனைத்தும் , ஹவாலா மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. தொலைபேசி மூலம் பேசினால் யாராவது கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். நேரடியாக பணம் செலுத்தி கொள்ளாமல், ஹவாலா மூலம் என்பதால் காவல்துறையினர் கண்காணிப்பு வளையத்துக்குள் வராமலே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்செயலாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் செங்கல்பட்டு அருகே வாகனம் சிக்கியதால் மிகப்பெரிய கும்பலின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 25 ஆண்டுகளாக காவல்துறை வட்டாரத்தில் சிக்காமல் கள்ளச் சாராயம் கடத்திய வந்த கும்பலை, செங்கல்பட்டு காவல்துறையினர் கைது செய்து அசத்தியுள்ளனர்.
 

ABP Nadu Exclusive: டெல்லியில் இருந்து 25 ஆண்டுகளாக நடைபெற்ற கடத்தல்.. சாராய சிண்டிகேட் சிக்கியது எப்படி..?
 
சார் காசு கொடுக்கிறேன் விட்டுடுங்க
 
சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தபோது காவல்துறையினரிடம், புஷ்பா திரைப்பட பாணியில்  லட்சக்கணக்கில் பணம் தருவதாகவும் தங்களை விட்டு விடுங்கள் எனவும் கூறியுள்ளனர் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு பிரிவு காவல்துறையினர் இது தொடர்பாக, பெங்களூரை சேர்ந்த லோகேஷ், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த வேலு செட்டி, லாரி ஓட்டுனர் முருகன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த கவியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னால் இருக்கும் அனைவரையும் கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.