மேலும் அறிய

திண்டுக்கல் : செல்ஃபோன் தராததால் கொடூரம்.. தங்கையை வெட்டிக்கொன்ற அக்காள் கைது .

வேடசந்தூர் அருகே அரிவாள்மனையால் வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். மகனிடம் பேச செல்போன் தராததால், வெறிச்செயலில் ஈடுபட்ட அக்காள் கைது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாககோனனூரை சேர்ந்தவர் பழனியம்மாள்(வயது 75). அவருடைய மகள் வெங்கடேஷ்வரி (46). இவர், அதே ஊரில் கணவர் சுப்பிரமணியுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்களது மகன் நாகமணிகண்டன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.


திண்டுக்கல் : செல்ஃபோன் தராததால் கொடூரம்.. தங்கையை வெட்டிக்கொன்ற அக்காள் கைது .

வெங்கடேஷ்வரி, தனது தாயார் வீட்டுக்கு அடிக்கடி வந்து தங்குவது உண்டு. வெங்கடேஷ்வரியின் தங்கை தமிழ்ச்செல்வி (43). இவர் அந்த ஊரில் உள்ள நூலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். அவருடைய கணவர் தங்கவேல், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் தாயார் பழனியம்மாளுடன் வசித்து வந்தார்.

பழனியம்மாளுடன் வீட்டில் மகள்கள் வெங்கடேஷ்வரி, தமிழ்ச்செல்வி ஆகியோர் வீட்டில் இருந்தனர். இன்று  வெங்கடேஷ்வரி தமிழ்ச்செல்வியிடம்  தனது மகன் நாகமணிகண்டனிடம் பேசவேண்டும், செல்போனில் போன் செய்துகொடு என்றார். இதற்கு  தமிழ்ச்செல்வி, பிறகு போன்செய்து செய்துகொள்ளலாம் என்று கூறிய நிலையில், இது வெங்கடேஷ்வரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  இதையடுத்து அவர் வீட்டில் காய்கறி நறுக்க வைத்திருக்கும் அரிவாள்மனையை எடுத்து வந்து தமிழ்ச்செல்வியின் மூக்கு மற்றும் கண் அருகே சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி சிறிது நேரத்தில் துடிதுடித்து அங்கேயே பரிதாபமாக இறந்தார். 


திண்டுக்கல் : செல்ஃபோன் தராததால் கொடூரம்.. தங்கையை வெட்டிக்கொன்ற அக்காள் கைது .

இந்தநிலையில் வீட்டில் இருந்த பழனியம்மாள் எழுந்து, மகள் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே வெங்கடேஷ்வரி வீட்டுக்கு வெளியே ஓடி வந்து என் தங்கை தமிழ்ச்செல்வியை கொன்றுவிட்டேன் என்று சத்தம் போட்டு திரும்ப, திரும்ப கூறியபடி இருந்தார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு தமிழ்ச்செல்வி இறந்து கிடந்தது தெரிந்தது. இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

பின்னர் அவர்கள், கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சொன்னதையே திரும்ப, திரும்ப கூறுகிறார் என்று போலீசார் தெரிவித்தனர். செல்போன் தர மறுத்ததால் தங்கையை அக்காளே வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget