மேலும் அறிய

திண்டுக்கல் : செல்ஃபோன் தராததால் கொடூரம்.. தங்கையை வெட்டிக்கொன்ற அக்காள் கைது .

வேடசந்தூர் அருகே அரிவாள்மனையால் வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். மகனிடம் பேச செல்போன் தராததால், வெறிச்செயலில் ஈடுபட்ட அக்காள் கைது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாககோனனூரை சேர்ந்தவர் பழனியம்மாள்(வயது 75). அவருடைய மகள் வெங்கடேஷ்வரி (46). இவர், அதே ஊரில் கணவர் சுப்பிரமணியுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்களது மகன் நாகமணிகண்டன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.


திண்டுக்கல் : செல்ஃபோன் தராததால் கொடூரம்.. தங்கையை வெட்டிக்கொன்ற அக்காள் கைது .

வெங்கடேஷ்வரி, தனது தாயார் வீட்டுக்கு அடிக்கடி வந்து தங்குவது உண்டு. வெங்கடேஷ்வரியின் தங்கை தமிழ்ச்செல்வி (43). இவர் அந்த ஊரில் உள்ள நூலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். அவருடைய கணவர் தங்கவேல், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் தாயார் பழனியம்மாளுடன் வசித்து வந்தார்.

பழனியம்மாளுடன் வீட்டில் மகள்கள் வெங்கடேஷ்வரி, தமிழ்ச்செல்வி ஆகியோர் வீட்டில் இருந்தனர். இன்று  வெங்கடேஷ்வரி தமிழ்ச்செல்வியிடம்  தனது மகன் நாகமணிகண்டனிடம் பேசவேண்டும், செல்போனில் போன் செய்துகொடு என்றார். இதற்கு  தமிழ்ச்செல்வி, பிறகு போன்செய்து செய்துகொள்ளலாம் என்று கூறிய நிலையில், இது வெங்கடேஷ்வரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  இதையடுத்து அவர் வீட்டில் காய்கறி நறுக்க வைத்திருக்கும் அரிவாள்மனையை எடுத்து வந்து தமிழ்ச்செல்வியின் மூக்கு மற்றும் கண் அருகே சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி சிறிது நேரத்தில் துடிதுடித்து அங்கேயே பரிதாபமாக இறந்தார். 


திண்டுக்கல் : செல்ஃபோன் தராததால் கொடூரம்.. தங்கையை வெட்டிக்கொன்ற அக்காள் கைது .

இந்தநிலையில் வீட்டில் இருந்த பழனியம்மாள் எழுந்து, மகள் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே வெங்கடேஷ்வரி வீட்டுக்கு வெளியே ஓடி வந்து என் தங்கை தமிழ்ச்செல்வியை கொன்றுவிட்டேன் என்று சத்தம் போட்டு திரும்ப, திரும்ப கூறியபடி இருந்தார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு தமிழ்ச்செல்வி இறந்து கிடந்தது தெரிந்தது. இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

பின்னர் அவர்கள், கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சொன்னதையே திரும்ப, திரும்ப கூறுகிறார் என்று போலீசார் தெரிவித்தனர். செல்போன் தர மறுத்ததால் தங்கையை அக்காளே வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget