மேலும் அறிய

ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரm கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியில் கல்லால் தாக்கி பெண் படுகொலை. நடத்தையில் சந்தேகப்பட்டு வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியை சேர்ந்த காயத்ரி (26) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.


ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு காயத்ரி திடீரென மாயமானார். இதனையடுத்து பல்வேறு இடங்களில் கார்த்திகேயன் தேடியும் காயத்ரி கிடைக்கவில்லை. குழந்தைகள், கணவரை பிரிந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூர் வந்த காயத்ரி அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை விசாரணை.. பொதுக்குழு நடைபெறுமா..?

இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திகேயன், தனது குழந்தைகளுடன் 2 நாட்களுக்கு முன்பு சாலைபுதூர் வந்தார். பின்னர் அவர்கள், அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென காயத்ரியை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட கார்த்திகேயன் அப்பகுதியில் தேடி பார்த்தார். அப்போது சாலைபுதூரில் உள்ள மேம்பாலம் அருகே காயத்ரி வேறு ஒரு இளைஞருடன் பேசி கொண்டிருந்தார். இதனால் கார்த்திகேயன், அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இதனையடுத்து கார்த்திகேயன் பாலம் அருகே சென்றபோது காயத்ரி உடன் பேசிக்கொண்டிருந்த நபர் ஓடியுள்ளார்.


ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்


இதுதொடர்பாக காயத்ரியிடம் கார்த்திகேயன் கேட்டுள்ளார். அப்போது கார்த்திகேயனுக்கும், காயத்ரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், அங்கு கிடந்த கல்லால் காயத்ரியின் தலையில் தாக்கியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனையடுத்து கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தலையில் படுகாயம் அடைந்த காயத்ரி சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை - நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் வெறிச்செயல்

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை, கணவர் கொலை செய்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget