மேலும் அறிய

சொத்துக்காக சகோதரனையே...கிணற்றுக்குள் மிதந்த தொழிலாளியின் சடலம் - கொலை வழக்காக மாறியது எப்படி?

நத்தம் அருகே சொத்துக்காக சொந்த சகோதரனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்டமலைபட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு வெள்ளையம்மாள், அடைக்கம்மாள் ஆகிய இரண்டு மனைவிகள். முதல் மனைவி வெள்ளையம்மாளுக்கு சின்னக்கரந்தி, முத்தம்மாள் ஆகிய இரண்டு மகள்களும், 2- வது மனைவிக்கு  அம்மணி என்ற தங்கமணி, ராமன் ஆகிய இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். பழனி மற்றும் அவரது இரண்டு மனைவிகளும் இறந்து விட்டனர். மூத்த மகளான சின்னக்கரந்தி (வயது 28) என்பவர் நத்தம் ஆவிச்சிபட்டியை  சேர்ந்த ஜெயராஜ் மகன் குணசேகரன் (வயது 37) என்பவரை காதல் கலப்பு திருமணம் செய்துள்ளார். இவர் சென்ட்ரிங் வேலை மற்றும் டெக்கரேஷன் வேலைகள் செய்து வந்தார்.


சொத்துக்காக சகோதரனையே...கிணற்றுக்குள் மிதந்த தொழிலாளியின் சடலம் - கொலை வழக்காக மாறியது எப்படி?

திருமணத்திற்கு பிறகு சின்னக்கரந்தி  என்பவரின் தோட்டத்து வீட்டிலேயே குணசேகரன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இளைய மகள் முத்தம்மாள் சின்னையம்பட்டியில் திருமணமாகி உள்ளார். இரண்டாவது மனைவியின் மகள் அம்மணி என்ற தங்கமணி (வயது 26) என்பவரை திண்டுக்கல் அருகே சிறுமலையில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணம் செய்த சில  ஆண்டுகளில்  அங்குள்ள வேறொரு நபருடன் அம்மனி கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். கணவரை விட்டுப் பிரிந்தவர் மொட்டமலைபட்டியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்து தம்பி ராமன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். ராமன் திருமண மற்றும் விசேஷங்களுக்கு டெக்கரேஷன் மற்றும் மைக் செட் போடும் வேலை செய்து வந்தான். இவருடைய நண்பன் எர்ரம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் (வயது 23) என்பவரும் இதே வேலையை செய்து வந்தான். இதனால் ராமன் வீட்டிற்கு அடிக்கடி கார்த்திக் வந்து சென்றுள்ளார். அவ்வாறு வந்து சென்றபோது ராமனின் சகோதரி அம்மணி என்ற தங்கமணியுடன் கார்த்திக்கு நெருக்கம் ஏற்பட்டது இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் சில மாதங்களாக அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.


சொத்துக்காக சகோதரனையே...கிணற்றுக்குள் மிதந்த தொழிலாளியின் சடலம் - கொலை வழக்காக மாறியது எப்படி?

இருவரும் கள்ளத்தொடரில் இருப்பதை அறிந்த ராமன் அவரது சகோதரியையும் நண்பனையும் கண்டித்து சகோதரிடமிருந்த செல்போனை பிடுங்கி இவர்களது பெரியப்பாவான பழனிச்சாமி என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனால் அம்மணி-கார்த்தி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்க முடியாத சூழல் உருவானது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த உறவை அறிந்த சின்னகரந்தி கணவர் குணசேகரன் அம்மணியை அடைவதற்கு பல முறை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதை அம்மணி அவரது சகோதரியும் குணசேகரன் மனைவியுமான சின்னகரந்தியிடமும் தம்பி ராமனிடமும் சொல்லியுள்ளார். இதனால் ராமனுக்கும் குணசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே சொத்து பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. சொத்து முழுவதும் ராமனின் பாட்டி பெயரில் இருந்ததால் பாகப்பிரிவினை செய்வதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் சொத்து பிரிப்பதில் சிக்கல் நீடித்து வந்துள்ளது. இதனால் ராமனுக்கும் குணசேகரனுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. கள்ளக்காதலை கண்டித்ததால் ராமனுக்கும் கார்த்திக்கும், சொத்து பிரச்சனையால் குணசேகரனுக்கு ராமனுக்கும் பகை நீடித்து வந்துள்ளது. இதனால் குணசேகரனும் கார்த்திக்கும் சேர்ந்து கடந்த 8- ஆம் தேதி காலை இருவரும் மது குடித்துக் கொண்டே ராமனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அதை தனது மனைவி சின்னகரந்தி, கார்த்திக்கின் காதலி அம்மணி ஆகியோரிடம் இருவரும் கூறியுள்ளனர். இதை அன்று இரவே செயல்படுத்த முடிவு செய்த நான்கு பேரும்  ராமன் அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து குணசேகரன் வீட்டில் நால்வரும் காத்திருந்தனர்.


சொத்துக்காக சகோதரனையே...கிணற்றுக்குள் மிதந்த தொழிலாளியின் சடலம் - கொலை வழக்காக மாறியது எப்படி?

ராமன் தூங்கியவுடன் அவர்கள் எதிர்பார்த்தபடி திட்டத்தை நிறைவேற்ற நேரம் வந்தது. அன்று நள்ளிரவு குணசேகரன் உள்ளிட்ட நான்கு பேரும் ராமன் தூங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர். அங்கு தென்னை ஓலையால் நெய்யப்பட்ட தட்டியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமனை குணசேகரன் மண்வெட்டி கைப்பிடியால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த ராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறந்துள்ளார். இறந்தவரின் ரத்தம் தட்டி ஆஸ்பெட்டாஸ் உள்ளிட்ட பகுதிகளில் சிதறி இருந்தது. உடலை அப்புறப்படுத்த அருகில் இருந்த கிணற்று மேட்டுக்கு நான்கு பேரும் தூக்கிச்சென்றுள்ளனர். அங்கு ராமனின் இடுப்பில் துண்டு மற்றும் வேஷ்டியை கொண்டு பெரிய கருங்கல்லை கட்டி கிணற்றுக்குள் தூக்கி வீசினர்.

பின்னர் கொலையாளிகள் அணிந்திருந்த ரத்த கரை படிந்த உடைகளை கழற்றி அவற்றை தீ வைத்து எரித்தனர். மறுநாள் சனிக்கிழமை அதிகாலையில் இறந்த ராமனின் ரத்தம் படிந்த இடத்தை சின்னகரந்தி,  அம்மணி ஆகிய இருவரும் சேர்ந்து ரத்தக்கரையை மறைக்க மாட்டு சானத்தால் பூசியும், மெழுகியும் மறைத்தனர். பின்னர் வழக்கம் போல் நடந்தது எதுவும் தெரியாதது போல் இராமன் என்பவரை காணவில்லை என ஊர் முழுவதும் சொல்லியுள்ளனர். சம்பவம் குறித்து உண்மை அறியாத  ராமனின் நண்பர்கள் நண்பனை காணவில்லை என சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்தை ஏற்றி பதிவிட்டு வந்தனர். பின்னர் மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் அவரைத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலையில் கிணற்றில் வீசிய ராமனின் உடல் மிதக்க ஆரம்பித்து துர்நாற்றம் வீசியது.


சொத்துக்காக சகோதரனையே...கிணற்றுக்குள் மிதந்த தொழிலாளியின் சடலம் - கொலை வழக்காக மாறியது எப்படி?

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினரும் கொலையாளிகளும் கிணற்றில் ராமனின் உடல் மிதப்பதாக நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நத்தம் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இறந்தவரின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் உடலில் காயங்களும் அவரது இடுப்பில் கருங்கல்லும் கட்டி இருந்ததை அறிந்து இறப்பில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் அவரது குடும்ப உறுப்பினர்களை விசாரணை செய்தனர்.

ராமன் இறப்பதற்கு முன் அவரது அலைபேசியில் வந்த அழைப்புகளை பரிசோதனை செய்ய தொடங்கினர் அப்போது எர்ரம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 10 முறைக்கு மேல் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கார்த்திக்கை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் பல உண்மைகள் வெளியே வந்தது. சொத்துக்காகவும் கள்ளக்காதலுக்காகவும் நால்வரும் கூட்டுச் சேர்ந்து சொந்த சகோதரனையே மேலே சொன்ன திட்டப்படி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.   கொலையாளிகள் நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சொந்த சகோதரனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget