மேலும் அறிய

மதுவுக்கு அடிமை..தினமும் துன்புறுத்தல்; மகனை கொன்ற தந்தை - தருமபுரி அருகே அதிர்ச்சி

கொலை செய்த தந்தை மற்றும் உடந்தையாக இருந்த அக்காவின் கணவர் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி அருகே குடிபோதையில் வயதான தாய், தந்தையை தினமும் அடித்து துன்புறுத்தி வந்ததால், தந்தையே மகனை கொலை செய்து புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த தந்தை மற்றும் உடந்தையாக இருந்த அக்காவின் கணவர் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
தருமபுரி அருகே தடங்கம் பகுதியை சேர்ந்த விவசாயியான கோவிந்தசாமி அவரது மனைவி திருப்பதி தம்பதியினர்  வசித்து வருகின்றனர். மேலும் மகன் ஜெயவேலுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், மனைவியை விட்டு பிரிந்து தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான ஜெயவேல் அடிக்கடி குடித்து விட்டு வயதான தாய், தந்தையிடம் பணம் கேட்டு தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 
 
இந்நிலையில் தடங்கம் அருகே உள்ள பதிகால்பள்ளத்தில் கோவிந்தசாமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரும் அவரது மனைவியும் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அங்கு குடிபோதையில் வந்த ஜெயவேல் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பணம் கொடுக்கவில்லை எனில் கொன்று விடுவேன் என தன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியதால்,  மகன் தன்னை கொன்று விடுவான் என்ற அச்சத்தில் தாய் பயந்து அருகில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தந்தை கோவிந்தசாமியை கத்தியைக் காட்டி மிரட்டிய போது, அச்சமடைந்த கோவிந்தசாமி, அருகே இருந்த கடப்பாறையால் ஜெயவேலை  தாக்கியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த ஜெயவேல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
 
அதனையடுத்து கோவிந்தசாமி தனது மருமகனான சக்திவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சக்திவேல், ஜெயவேலுவின் உடலை கைப்பற்றி யாருக்கும் தெரியாமல் தனது தோட்டத்திற்கு அருகே எரித்துவிடலாம் என முடிவு செய்து, குழித் தோண்டி அதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனது மகன் கொலை செய்யபட்டதை அறிந்த தாய் திருப்பதி கூச்சலிடவே அருகாமையில் இருந்தவர்கள் சம்பவத்தை அறிந்து அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஜெயவேல் உடலை கைபற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 
மேலும் மகனை கொலை செய்த கோவிந்தசாமி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மருமகன் சக்திவேல் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த அதியமான்கோட்டை காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கடப்பாரையால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
Sabarivarman Custodial Death : அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Embed widget