மேலும் அறிய

திருமணத்திற்கு பின் கேட்டாலும் அது வரதட்சணைதான்… விஸ்மயா வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு!

வரதட்சணையின் திருத்தப்பட்ட சட்ட வரையறை, "வரதட்சணை என்பது திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்தின் போது மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிந்தைய காலத்தையும் உள்ளடக்கியது" என்று நீதிமன்றம் கூறியது.

திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்தின்போதோ வரதட்சணைக் கேட்கவில்லை என்ற வாதத்தை ஏற்க மறுத்த கேரள உயர்நீதிமன்றம், திருமணத்திற்கு பிறகு கேட்டாலும் வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனைகள் பொருந்தும் என்று கூறி, விஸ்மயா வரதட்சணை கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துள்ளது.

விஸ்மயா வழக்கு

ஜூன் 21, 2021 அன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் தனது கணவன் வீட்டில் 23 வயதான ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா இறந்து கிடந்தார். மே மாதம் அந்த பெண்ணை வரதட்சணைக் கொடுமையால் தற்கொலைக்குத் தூண்டியதன் காரணமாக முன்னாள் உதவி மோட்டார் வாகன ஆய்வாளரான அவரது கணவர் கிரண் குமார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அந்த தண்டனையை நிறுத்தி வைக்ககோரிய மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் அலெக்சாண்டர் தாமஸ் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, திருமணத்திற்கு முன் வரதட்சணை தேவை இல்லை என்று கிரண் குமார் எழுப்பிய வாதத்தை ஏற்க மறுத்தது. கிரண் குமார் தனது முறையீட்டில், குழந்தைக்காக ஏங்கித் தவித்ததால் தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாகவும், தந்தையின் ஆசீர்வாதம் இல்லாமல் கர்ப்பம் தரிக்க முடியாது என்றும் பயந்துதான் தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். 

திருமணத்திற்கு பின் கேட்டாலும் அது வரதட்சணைதான்… விஸ்மயா வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஆதாரங்களை மேற்கோளிட்ட நீதிமன்றம்

எவ்வாறாயினும், அதன் முன் சமர்ப்பிக்கப்பட்ட வாய்வழி மற்றும் ஆவண ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, விஸ்மயா தனது கணவரால் கொடுமை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளானார் என்பது நிரூபிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றம் கூறியது. விசாரணையில் கூறப்பட்ட விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம், திருமணத்திற்குப் பிறகு, வரதட்சணைக்காக குமார் தனது மனைவியை துன்புறுத்தியதையும், தாக்கியதையும் குமாரின் அடுத்தடுத்த நடத்தை காட்டுகிறது என்று குறிப்பிட்டது. 

தொடர்புடைய செய்திகள்: வாள்.. லிவ்-இன் உறவு.. துண்டாய் வெட்டப்பட்ட காதலி..கேரளாவில் ஒரு டெல்லி சம்பவம்.. பதறவைத்த கொடூரம்

மொபைல் உரையாடல்கள்

திருமணத்திற்கு முன்பு நடந்த மொபைல் உரையாடலைக் கருத்தில் கொண்டு குமாருக்கு எந்த நிவாரணமும் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது, "திருமணத்திற்கு முன் எந்த கோரிக்கையும் இல்லை என்று கூறினாலும், ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மேல்முறையீட்டாளரின் அடுத்தடுத்த நடத்தைகள், திருமணத்திற்குப் பிறகு, அவர் கொடுத்த கார் காரணமாக இறந்தவரை துஷ்பிரயோகம் செய்து தாக்கினார் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த தங்க ஆபரணங்களின் போதவில்லை என்று கூறியதற்கும் ஆதாரம் உள்ளது,” என்று நீதிமன்றம் கூறியது.

திருமணத்திற்கு பின் கேட்டாலும் அது வரதட்சணைதான்… விஸ்மயா வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு!

திருமணத்திற்கு பின் கேட்டாலும் குற்றம்தான்

வரதட்சணைத் தடைச் சட்டத்தின் 2-வது பிரிவில் இடம் பெற்றுள்ள “கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது” என்ற வார்த்தைகளைக் கருத்தில் கொண்டு திருமணத்தின் போது உடன்பாடு இருக்க வேண்டும் என்ற குமாரின் வழக்கறிஞர் வாதம் ஏற்கத்தக்கது அல்ல என்றும் தெரிவித்தது. சட்டத்தின் 2வது பிரிவில் வரதட்சணையின் திருத்தப்பட்ட வரையறை, "வரதட்சணை என்பது திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்தின் போது மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிந்தைய காலத்தையும் உள்ளடக்கியது" என்று நீதிமன்றம் கூறியது. மேலும் கிரண் குமாரின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தபோது தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது. பிரிவு 498A (வரதட்சணைக்காக ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்) கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததற்காக அவர் குற்றவாளி எனக் கண்டறிந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் 304பி (வரதட்சணை மரணம்) மற்றும் வரதட்சணைத் தடைச் சட்டம், 1961 இன் பிரிவுகள் 3 மற்றும் 4 ஆகியவையும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget