மேலும் அறிய

திருமணத்திற்கு பின் கேட்டாலும் அது வரதட்சணைதான்… விஸ்மயா வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு!

வரதட்சணையின் திருத்தப்பட்ட சட்ட வரையறை, "வரதட்சணை என்பது திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்தின் போது மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிந்தைய காலத்தையும் உள்ளடக்கியது" என்று நீதிமன்றம் கூறியது.

திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்தின்போதோ வரதட்சணைக் கேட்கவில்லை என்ற வாதத்தை ஏற்க மறுத்த கேரள உயர்நீதிமன்றம், திருமணத்திற்கு பிறகு கேட்டாலும் வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனைகள் பொருந்தும் என்று கூறி, விஸ்மயா வரதட்சணை கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துள்ளது.

விஸ்மயா வழக்கு

ஜூன் 21, 2021 அன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் தனது கணவன் வீட்டில் 23 வயதான ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா இறந்து கிடந்தார். மே மாதம் அந்த பெண்ணை வரதட்சணைக் கொடுமையால் தற்கொலைக்குத் தூண்டியதன் காரணமாக முன்னாள் உதவி மோட்டார் வாகன ஆய்வாளரான அவரது கணவர் கிரண் குமார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அந்த தண்டனையை நிறுத்தி வைக்ககோரிய மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் அலெக்சாண்டர் தாமஸ் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, திருமணத்திற்கு முன் வரதட்சணை தேவை இல்லை என்று கிரண் குமார் எழுப்பிய வாதத்தை ஏற்க மறுத்தது. கிரண் குமார் தனது முறையீட்டில், குழந்தைக்காக ஏங்கித் தவித்ததால் தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாகவும், தந்தையின் ஆசீர்வாதம் இல்லாமல் கர்ப்பம் தரிக்க முடியாது என்றும் பயந்துதான் தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். 

திருமணத்திற்கு பின் கேட்டாலும் அது வரதட்சணைதான்… விஸ்மயா வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஆதாரங்களை மேற்கோளிட்ட நீதிமன்றம்

எவ்வாறாயினும், அதன் முன் சமர்ப்பிக்கப்பட்ட வாய்வழி மற்றும் ஆவண ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, விஸ்மயா தனது கணவரால் கொடுமை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளானார் என்பது நிரூபிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றம் கூறியது. விசாரணையில் கூறப்பட்ட விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம், திருமணத்திற்குப் பிறகு, வரதட்சணைக்காக குமார் தனது மனைவியை துன்புறுத்தியதையும், தாக்கியதையும் குமாரின் அடுத்தடுத்த நடத்தை காட்டுகிறது என்று குறிப்பிட்டது. 

தொடர்புடைய செய்திகள்: வாள்.. லிவ்-இன் உறவு.. துண்டாய் வெட்டப்பட்ட காதலி..கேரளாவில் ஒரு டெல்லி சம்பவம்.. பதறவைத்த கொடூரம்

மொபைல் உரையாடல்கள்

திருமணத்திற்கு முன்பு நடந்த மொபைல் உரையாடலைக் கருத்தில் கொண்டு குமாருக்கு எந்த நிவாரணமும் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது, "திருமணத்திற்கு முன் எந்த கோரிக்கையும் இல்லை என்று கூறினாலும், ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மேல்முறையீட்டாளரின் அடுத்தடுத்த நடத்தைகள், திருமணத்திற்குப் பிறகு, அவர் கொடுத்த கார் காரணமாக இறந்தவரை துஷ்பிரயோகம் செய்து தாக்கினார் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த தங்க ஆபரணங்களின் போதவில்லை என்று கூறியதற்கும் ஆதாரம் உள்ளது,” என்று நீதிமன்றம் கூறியது.

திருமணத்திற்கு பின் கேட்டாலும் அது வரதட்சணைதான்… விஸ்மயா வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு!

திருமணத்திற்கு பின் கேட்டாலும் குற்றம்தான்

வரதட்சணைத் தடைச் சட்டத்தின் 2-வது பிரிவில் இடம் பெற்றுள்ள “கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது” என்ற வார்த்தைகளைக் கருத்தில் கொண்டு திருமணத்தின் போது உடன்பாடு இருக்க வேண்டும் என்ற குமாரின் வழக்கறிஞர் வாதம் ஏற்கத்தக்கது அல்ல என்றும் தெரிவித்தது. சட்டத்தின் 2வது பிரிவில் வரதட்சணையின் திருத்தப்பட்ட வரையறை, "வரதட்சணை என்பது திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்தின் போது மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிந்தைய காலத்தையும் உள்ளடக்கியது" என்று நீதிமன்றம் கூறியது. மேலும் கிரண் குமாரின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தபோது தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது. பிரிவு 498A (வரதட்சணைக்காக ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்) கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததற்காக அவர் குற்றவாளி எனக் கண்டறிந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் 304பி (வரதட்சணை மரணம்) மற்றும் வரதட்சணைத் தடைச் சட்டம், 1961 இன் பிரிவுகள் 3 மற்றும் 4 ஆகியவையும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
Embed widget