பிரிந்து சென்ற மனைவி! கணவர் எடுத்த விபரீத முடிவு... ரயில் முன் பாய்ந்து கூலித் தொழிலாளி தற்கொலை
Mayiladuthurai : மயிலாடுதுறை அருகே கூலித் தொழிலாளி ஒருவருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே கூலித் தொழிலாளி ஒருவருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் ரயிவே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூரை அடுத்த கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் 51 வயதான ரமேஷ். பெயிண்டர் தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருந்த காரணத்தால் வேலைக்கு சரிவர செல்ல முடியாமல் சூழல் ஏற்பட்டு, வருமான இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரிந்து சென்ற சென்ற மனைவி
இதன் காரணமாக ரமேஷின் மனைவி ரமேஷை விட்டு பிரிந்து சென்று தனது மகளுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதன் காரணமாக ரமேஷுக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபகாலமாக அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்புக்கு ஆளாகியும் ரமேஷ் வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ரமேஷ் ஆளாகியுள்ளார். மன உளைச்சல் அதிகப்பு காரணமாக இன்று காலை திடீரென ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது தலை வேறு உடல் வேறாக துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினர் விசாரணை
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் ரமேஷின் உடலை மீட்டு மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
இதையும் படிங்க : Egg Benefits: மரணத்தைக் கூட தள்ளிப்போடும் முட்டை..! இதய ஆரோக்கியத்தின் கார்டியன், இவ்வளவு நன்மைகளா?
மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

