மேலும் அறிய

குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரம் : சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் கைது!

குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரம்: சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் கோயில் அலுவல் ரீதியாக இந்து சமய அறநிலையத் துறை ஆய்விற்கு எதிர்ப்பு தெரிவித்தது, கனக சபை மேடை மீது பக்தர்கள் ஏறி வழிபாடு செய்வதற்கு இருந்த தடை விதித்தது, கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த பெண் பக்தர் ஒருவரை சாதியை குறிப்பிட்ட இழிவாக பேசியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக ஆய்வுகளும் விசாரணைகளும் நடைபெற்று வருகிறது. 
 
இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக குழந்தை திருமணங்கள் செய்து வைப்பதாக புகார் எழுந்தன.
 
மாவட்ட சமூக நலத்துறைக்கு வந்த தகவல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டில் 13 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக சிதம்பரம் நடராஜர் கோயில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், மற்றும் சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேசன் இருவரையும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 
 
கடந்த 2021-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த திருமணத்தின்போது, திருமணம் செய்து வைத்த சிறுமிக்கு வயது 13 என்றும், மாப்பிள்ளைக்கு 17வயது என்றும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் சிதம்பரம் விசாரணை மேற்கொண்டார். பிறகு இருவரையும் சிதம்பரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். அதையடுத்து இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிதம்பரம் சிறையில் அடைத்தனர்.
 
முன்னதாக இந்த சம்பவம் குறித்து மற்ற பொது தீட்சிதர்களுக்கு தகவல் தெரிந்ததால் கோயில் கோபுர வாயில் முன்பு உள்ள சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் தீட்சிதர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சித்தர்களை போலீசார் கைது செய்து திருமணம் மண்டபத்தில் அடைத்தனர். இதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கோயில் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இரவு முதல் நள்ளிரவு வரை சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் அருகே பரபரப்பாக காணப்பட்டது.
 
கடந்த 2021 ஜனவரி 25-ஆம் நாளன்று அதிகாலை 4.30 முதல் 6 மணிக்கு இந்த திருமணத்தை செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அவர்களது பிள்ளைகள் குழந்தை திருமணம் செய்து வைத்தது தொடர்பான தகவல் மற்றும் ஆதாரம் எங்களுக்கு கிடைத்தது. அந்த ஆலயத்தின் மையமாக கொண்டு, சமூக நலத்துறை சார்பில் காவல் துறையிடம் சமூக நலத்துறை அலுவலர் மீனா புகார் அளித்ததாக சமூக நலத்துறை அதிகாரி தெரிவித்திருந்தார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் பேசுகையில், குழந்தை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழந்தை திருமணத்தால் ஏற்படும் சமூக சீர்கேடுகள், அதனால் அந்த குழந்தைக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இதை நடைமுறையில் வைத்துள்ள வழக்கமாக கருதி இவ்வாறு குழந்தை திருமணம் செய்து வருகின்றனர். ஆனால் இது சட்டத்துக்கு புறம்பானது. தற்போது விதிமுறையை மீறி குழந்தை திருமணம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 
இதுதொடர்பாக போராட்டத்தின்போது, அவர்களிடம் தொடர்ந்து புரிய வைத்தோம். பலர் அதை உணராமல் இருந்தனர். பின்னர் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அதன் தன்மையை உணர்ந்து ஒதுங்கிவிட்டனர்.  கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தில் இந்த வருடம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தீட்சிதர்கள் தரப்பில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Embed widget