மேலும் அறிய

கொடுத்தது ரூ.5 லட்சம்; கேட்பது ரூ. 12 லட்சம்: கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை - சிக்கிய பெண்!

கடலூர் புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் முருகன் மகன் செல்வக்குமார் (வயது 27). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 1-ந் தேதி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்ற செல்வக்குமார், திடீரென மயங்கி விழுந்தார். இவரை கடலூர் புதுநகர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப செலவுக்காக செல்வக்குமார், ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதும், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டதாகவும், ஆனாலும் அந்த பெண் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்ததும், இதனால் மன வேதனை அடைந்த அவர், விஷம் குடித்து விட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தபோது மயங்கி விழுந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக கடலூர் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகோத்தமன், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று செல்வக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றார். இதனிடையே செல்வக்குமார் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கொடுத்தது ரூ.5 லட்சம்; கேட்பது ரூ. 12 லட்சம்: கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை - சிக்கிய பெண்!

இதுபற்றி கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- எனது கடைசி மகன் செல்வக்குமார் கடந்த 4 ஆண்டுகளாக காவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர், பக்கத்து ஊரான பெரியநெல்லிக்கொல்லையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி அனிதா (35) என்பவரிடம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கினார். அதற்கு சான்றாக 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தார். அந்த பணத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அசல், வட்டியுடன் அனிதாவிடம் திருப்பி கொடுத்து விட்டார். ஆனால் செல்வக்குமார் கையெழுத்து போட்ட பத்திரத்தில் ரூ.12 லட்சம் தர வேண்டும் என்று அனிதா எழுதியுள்ளார்.


கொடுத்தது ரூ.5 லட்சம்; கேட்பது ரூ. 12 லட்சம்: கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை - சிக்கிய பெண்!

ரூ.12 லட்சத்தை கொடுத்து விடு, இல்லையெனில் இந்த பத்திரத்தை வைத்து உன்னுடைய வேலையை காலி செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் தன்னுடைய வேலை பறி போய் விடுமோ என்ற அச்சத்தாலும், மன உளைச்சல் ஏற்பட்டதாலும் விஷம் குடித்து செல்வக்குமார் தற்கொலை செய்து விட்டார். ஆகவே கந்து வட்டி கேட்டு மிரட்டிய அனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.அதன்பேரில் கந்து வட்டி கேட்டு மிரட்டல், தற்கொலைக்கு தூண்டியதாக அனிதா மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இருப்பினும் கந்து வட்டி கேட்டு பெண் மிரட்டியதால் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"அம்மா, அப்பா மிஸ் யூ " எழுதி வைத்த கடிதம் - இளம்பெண்ணுக்கு கலைந்த கிரிக்கெட் கனவு
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தல் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தல் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!
" எவன் கூட வாழப் போற " வேலை முடிந்து வந்த மனைவியுடன் தகராறு !! நடந்தது என்ன ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Result District Wise: பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய ஈரோடு மாவட்டம்; இத்தனை சதவீதம் தேர்ச்சியா.?
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய ஈரோடு மாவட்டம்; இத்தனை சதவீதம் தேர்ச்சியா.?
TN 12th Result Centums: கணினி அறிவியல்ல இத்தனை ஆயிரம் பேர் 100 க்கு 100-ஆ.?! எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பேர் தெரியுமா.?
கணினி அறிவியல்ல இத்தனை ஆயிரம் பேர் 100 க்கு 100-ஆ.?! எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பேர் தெரியுமா.?
12th Supplementary Exam Date: 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? .. துணைத்தேர்வு தேதி, விண்ணப்பிக்கும் நாள் அறிவிப்பு!
12th Supplementary Exam Date: 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? .. துணைத்தேர்வு தேதி, விண்ணப்பிக்கும் நாள் அறிவிப்பு!
TN 12th Result 2026: வெளியானது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி!
TN 12th Result 2026: வெளியானது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி!
TN 12th Result School Wise: 12ம் வகுப்பு ரிசல்ட்.. மாஸ் காட்டிய அரசு, தனியார் பள்ளிகள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
TN 12th Result School Wise: 12ம் வகுப்பு ரிசல்ட்.. மாஸ் காட்டிய அரசு, தனியார் பள்ளிகள்.. தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
TVK Vijay: தவெக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா? - விதவிதமாக பரவும் தகவல்கள்.. குழப்பத்தில் மக்கள்!
TVK Vijay: தவெக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா? - விதவிதமாக பரவும் தகவல்கள்.. குழப்பத்தில் மக்கள்!
Trump Warns Iran: “ஈரானை பைத்தியக்காரர்கள் வழிநடத்துகிறார்கள்“; இன்னும் ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தப்படும் - ட்ரம்ப்
“ஈரானை பைத்தியக்காரர்கள் வழிநடத்துகிறார்கள்“; இன்னும் ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தப்படும் - ட்ரம்ப்
TVK Vijay: 3 நாள் தான் டைம்.. விஜய்க்கு கெடு விதித்த ஆளுநர்.. பரபரப்பில் அரசியல் களம்!
TVK Vijay: 3 நாள் தான் டைம்.. விஜய்க்கு கெடு விதித்த ஆளுநர்.. பரபரப்பில் அரசியல் களம்!
Embed widget