மேலும் அறிய

விவாகரத்து கடிதம் பெற்றுத்தர ரூ.5000 லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது

ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்துடன் நேற்று இரவு அய்யப்பன் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

கடலூர் அருகே மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர ரூ.5000 லஞ்சம் வாங்கிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்‌.
 
கடலூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனி(30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு அய்யப்பன் கடலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு விசாரணைக்கு ரஞ்சனி ஆஜராகவில்லை. இதனால் தனது மனைவியிடம் விவாகரத்து செய்வது தொடர்பாக கடிதம் பெற்று தருமாறு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அய்யப்பன் மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
 
இதையடுத்து நெய்வேலி காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம்(55) அய்யப்பனிடம் விசாரணை நடத்தினார். அப்போது வழக்கு சம்பந்தமாக மனைவிடம் விவாகரத்து கடிதம் பெற்று தர தனக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என பாலசுந்தரம், அய்யப்பனிடம் கேட்டுள்ளார். 
 
லஞ்சம் கொடுக்க விரும்பாத அய்யப்பன், இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்துடன் நேற்று இரவு அய்யப்பன் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
 
பின்னர் அங்கிருந்த பாலசுந்தரத்திடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் சியாம் சுந்தர் என்பவர் விசாரணைக்கு வந்தவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது லஞ்ச வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைதான சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget