மேலும் அறிய

‛நள்ளிரவில் போன் செய்த உதவியாளர்... உடல் முழுக்க காயம்...’ திமுக எம்.பி., FIRல் உள்ளது இது தான்!

‛‛அவர்கள் பண்ருட்டி GH சென்று அங்குள்ள பிரேதத்தை பார்த்து, உடல் முழுவதும் காயம் உள்ளது எனவும் ரத்தக்கறை படிந்திருத்ததையும் படம் பிடித்து செல்போனில் எனக்கு அனுப்பி வைத்தார்கள்..’

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் நடந்த கொலை வழக்கில் சரணடைந்த எம்பி ரமேஷ் மூன்று மணி நேர சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கடலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. சந்தேக வழக்காக இருந்த இந்த வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி விசாரணையில் மாற்றப்பட்டது.
 
இந்நிலையில் எம்பி ரமேஷ் மற்றும் அவரது ஊழியர்கள் மீது கொடுக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.  கொலையான கோவிந்தராசுவின் மகன் செந்தில் வேல் கொடுத்த புகாரின் பேரில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதோ அதன் விபரம்...
 
 
புகார்தாரர்: செந்தில்வேல், வயது 38 S/O கோவிந்தராசு,  வடக்கு தெரு. மேல் மாம்பட்டு, பண்ருட்டி -TK.
விசாரணை அதிகாரி: காவல் ஆய்வாளர் அவர்கள், காடாம்புலியூர் காவல் நிலையம் காடாம்புலியூர்,
 
ஐயா, நான் தற்பொழுது சென்னையில் வேலை செய்து வருகிறேன். எனது அப்பா கோவிந்தராசு, S/O, கோதண்டபாணி என்பவர் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள TRV ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான TRV Gayathiri cashews, பணிக்கன்குப்பம் கம்பெனியில் சுமார் 7 வருட காலமாக பணிக்கண்குப்பம் கிளையில் வேலை செய்து வருகிறார். வழக்கமாக காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். கடந்த ஒரு வார காலமாக கம்பெனியில் 'ஓரயஞ்சனையாக நடத்துகிறார்கள்; காலப்போக்கில் சரியாகி விடும் என சிவசங்கர பூபதி, லோகநாதன் ஆகியோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் நேற்று (19.09.2021 ) காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று விட்டார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை. அதாவது 20.9.2021 அன்று அதிகாவை சுமார் 2:25 மணிக்கு எனது அப்பா செல்போனிலிருத்து எனக்கு போன் வந்தது. அப்பொழுது TRV Ramesh MP அவர்களின் உதவியாளர் பேசுவதாகவும், எனது அப்பா TRV Ramesh முந்திரி கம்பெனியில் மருந்து குடித்து விட்டதாகவும் அவரை பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது டாக்டர் அவர் இறந்து விட்டதாக அறிந்ததாகவும் தகவல் தெரிவித்தார். நான் உடனடியாக எனது பெரியப்பா மகன் ரகுராமன் மற்றும் ஆனந்தராஜ் அவர்களுக்கு தகவல்  தெரிவித்தேன். அவர்கள் பண்ருட்டி GH சென்று அங்குள்ள பிரேதத்தை பார்த்து உடல் முழுவதும் காயம் உள்ளது எனவும் ரத்தக்கறை படிந்திருத்ததையும் படம் பிடித்து செல்போனில் எனக்கு அனுப்பி வைத்தார்கள், அந்த படத்தில் அப்பாவுடைய இடது கண் மற்றும் உடல் முழுவதும் காயம் மற்றும் ரத்தக்கறைகள் இருந்தன. எனது அப்பா நல்ல மனநிலையில் இருந்தார். அதனால் அவர் மருந்து குடிக்க வேண்டிய அவசியமில்லை. நான் விசாரித்து பார்த்ததில் (1). TRV Ramesh MP மறும் அவரது PA (2), நடராஜ் மற்றும் கம்பெனி மேலாளர் கந்தவேல் மற்றும் அல்லாபிச்சை மற்றும் வினோத் மற்றும் அவரது கம்பெனி ஆட்கள் அடித்ததால் தான் இறத்து உள்ளார், எனவே தந்தையை கொலை செய்தவர்கள் மீது தக்க முடிககை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
என கூறப்பட்டிருந்தது ஆதலால் இதனை காடம்புலியூர் காவல் நிலைய குற்ற எண்: 5621/021 U/S 174 CrPC (சந்தேக மரணம்) என வழக்கு பதியப்பட்டது,  
என அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Embed widget