மேலும் அறிய

திருச்சியில் பரபரப்பு... மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கத்தியால் குத்திக்கொலை - 3 பேர் கைது

திருச்சியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (வயது 34). இவர் திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள பல்வேறு ஓட்டல்களில் தொழிலாளியாக (சர்வர்) பணியாற்றி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள அன்புக்கரங்கள் என்ற இடத்தில் வைக்கப்படும் துணிகளை எடுத்து உடுத்திக் கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை இவர் திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கும் அங்கு நின்று இருந்த பெண் உள்பட 3 பேர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் 3 பேரும் சேர்ந்து விக்ரமை அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து அவர் தப்பி ஓடினார். ஆனாலும் அவரை துரத்தி சென்று தாக்கினர். தொடர்ந்து மாரிஸ் பாலம் அருகே உள்ள ஒரு கடை வாசலில் வைத்து 3 பேரும் சேர்ந்து விக்ரமை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
 

திருச்சியில் பரபரப்பு...  மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கத்தியால் குத்திக்கொலை - 3 பேர் கைது
 
பாலியல் தொந்தரவு :
 
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது: முதல்கட்ட விசாரணையில், திருச்சி உறையூர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் தீபிகா (27) கைக்குழந்தையுடன் தனியாக ரோட்டில் யாசகம் எடுத்து சாலையோரங்களில் தங்கி வந்துள்ளார். இவருக்கும் திருச்சி கீழ சிந்தாமணியை சேர்ந்த பாலா என்கிற வெந்தகை பாலா (34) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோட்டை பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் தூங்கிய போது விக்ரம் தீபிகாவிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தாராம்.  மேலும் இது குறித்து தீபிகா வெந்தகை பாலாவிடம் கூறினார். இதையடுத்து நேற்று மாலை பாலா மற்றும் அவரது நண்பர் திருச்சி பெரியகடை வீதி சந்துக்கடையை சேர்ந்த கணேசன் (35), தீபிகா ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனிடையே கரூர் செல்லும் பஸ்சில் 3 பேரும் தப்பி செல்ல இருந்த நிலையில் 3 பேரையும் சத்திரம் பஸ்நிலையத்தில் வைத்து கோட்டை போலீசார் பிடித்து கைது செய்தனர். கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த கோட்டை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா, துணை கமிஷனர் அன்பு ஆகியோர் பாராட்டினர்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
”10 ஆண்டுகளாக இதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை” - பிரதமர் மோடி விளக்கம்
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி.. அதிர்ச்சியூட்டும் டிக்கெட் விலை!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
NEET Exam Results: 2024 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையா?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Sabarimala Aravana Payasam : பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
Embed widget