மேலும் அறிய

வேலூரின் பிரபல ரௌடிக்கு மாவு கட்டு போட்ட காவல் துறை - யார் இந்த வசூர் ராஜா..?

தமிழகம் முழுவதுமுள்ள கூலிப்படைத் தலைவன்களுடன் வசூர் ராஜாவுக்கும் தொடர்பிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் ஓ.எஸ்.பாஷா. பெயிண்ட் கடை வைத்து நடத்தி வரும் இவர், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், என்னை 9 மாதங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு தான் வசூரை சேர்ந்த ராஜா பேசுவதாகவும், எனக்கு மூன்று லட்சம் ரூபாயை தர வேண்டும் இல்லை எனில் தன்னையும் தனது குடும்பத்தாரையும் கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டி உள்ளார். இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி பாஷா மற்றும் அவரது கடையில் வேலை பார்க்கும் சலீம் ஆகிய இருவரும் ஷூ கம்பெனிக்கு சென்று கொண்டிருக்கும்போது அவர்களைப் பின் தொடர்ந்து காரில் வந்த வசூர் ராஜா மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் இருவரும் பாட்ஷா மற்றும் சலிமை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

 


வேலூரின் பிரபல ரௌடிக்கு மாவு கட்டு போட்ட காவல் துறை - யார் இந்த வசூர் ராஜா..?

 

நாளை உன் கடைக்கு வருவேன் ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்துவை இல்லையெனில் உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு சென்றதாகவும், மேலும் தான் வைத்திருந்த 20,000 ரூபாய் ரொக்க பணத்தை பறித்துக் கொண்டு மீண்டும் நாளை வருவோம் பணத்தை தயார் செய்துவை என மிரட்டி சென்றுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், குற்றவாளிகளை பிடிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி வசூர் ராஜா மற்றும் அவனது கூட்டாளி வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 


வேலூரின் பிரபல ரௌடிக்கு மாவு கட்டு போட்ட காவல் துறை - யார் இந்த வசூர் ராஜா..?

யார் இந்த வசூர் ராஜா ? 

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி புதுவசூரைச் சேர்ந்தவர் வசூர் ராஜா வயது (36). வேலூரில், ரௌடிசம் பெருகக் காரணமாக இருந்த சீனியர் ரௌடி இவர்தான். காவல்நிலையத்தில் வசூர் ராஜா மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 50-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரௌடி வசூர் ராஜா 8 முறை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர் 2019-ல், மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில், சொகுசு காரில் வந்த ரௌடிக் கும்பல் 50 ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்து, அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்தச் சம்பவத்தில், கைதுசெய்யப்பட்ட ஆறு ரௌடிகளில் வசூர் ராஜாவும் ஒருவர் ஆவார். மதுரையில் அவர் சிக்கிய பின்னரே, தமிழகம் முழுவதுமுள்ள கூலிப்படைத் தலைவன்களுடன் வசூர் ராஜாவுக்கும் தொடர்பிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மதுரை சிறையிலிருந்து வெளியில் வந்த வசூர் ராஜாவை கர்நாடகா காவல்துறையினர் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக கைது செய்தனர். பெங்களூரு சிறையிலிருந்து ஜாமீனில் வந்த ராஜா, சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரௌடி செல்லதுரை கொலை வழக்கில் தேடப்பட்டார். பின்னர், ஆத்தூர் நீதிமன்றத்தில் வசூர் ராஜா சரணடைந்தார். நீதிமன்றக் காவலில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வசூர் ராஜா, அங்கிருந்தும் ஜாமீனில் வந்த பின்னர், கர்நாடகா, ஆந்திரா என அருகிலுள்ள வெளி மாநிலங்களில் பதுங்கியிருந்தபடி, வசூர் ராஜாவின் ஆட்கள் மூலம் தமிழ்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget