Crime: பதைபதைக்க வைத்த கொடூரம்.. குழந்தை பிறந்ததும் பாத்ரூம் ஜன்னலில் இருந்து வீசிக்கொன்ற தாய் பகீர் வாக்குமூலம்..
டெல்லியில், குழந்தை பிறந்ததும் பாத்ரூம் ஜன்னலில் தூக்கிவீசி கொன்று விட்டு, போலீஸ் விசாரணையில் தாய் சொன்ன காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லியில், குழந்தை பிறந்ததும் பாத்ரூம் ஜன்னலில் தூக்கிவீசி கொன்று விட்டு, போலீஸ் விசாரணையில் தாய் சொன்ன காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிழக்கு டெல்லியின் நியூ அசோக் விஹாரில் 20 வயது பெண் ஒருவர் கடந்த திங்கள்கிழமை(09/01/2022) தனது வீட்டு கழிவறையின் ஜன்னலில் வழியே பிறந்த குழந்தையை வீசியதாகவும் அதனால் குழந்தை இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், திருமணமாகாத பெண், களங்கத்தில் இருந்து தப்பிக்க குழந்தையை கொன்றதாக கூறியுள்ளனர். திங்கள்கிழமை அவருக்கு குழந்தை பிறந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
நொய்டாவில் தனியார் துறையில் பணிபுரியும் பெண், குழந்தையை, ஜெய் அம்பே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.
சாலையில் கிடந்த குழந்தையை உள்ளூர்வாசிகள் கண்டதும், அவர்கள் குழந்தையை நொய்டா மெட்ரோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கிருந்து எல்பிஎஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காவல்துறை துணை ஆணையர் (கிழக்கு) அம்ருதா குகுலோத் கூறுகையில், குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள பல வீடுகளில் போலீசார் சோதனை செய்ததாகவும், குற்றவாளியைக் கண்டுபிடிக்க உள்ளூர்வாசிகளிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறினார்.
அவர்கள் நடத்திய விசாரணையில், ஒரு வீட்டில் பல ரத்த தடயங்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர், மேலும் வீட்டில் வசிப்பவரை விசாரித்தபோது, போலீஸாரின் விசாரணைக்கு பயந்து உண்மையை ஒப்புக்கொண்ட பெண் ஒருவர், ”தான் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து தனது கழிப்பறையின் ஜன்னலில் இருந்து வீசியதகா” கூறியுள்ளார்.
"அவர் திருமணமாகாதவர் என்றும் சமூக அவமதிப்புக்கு பயந்து குழந்தையை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார்" என்றும் டிஜிபி கூறினார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்குச் சென்று அடுத்தகட்ட விசாரணைக்காக ஆதாரங்களைச் சேகரித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மரபணு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
"இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) மற்றும் 201 (குற்றத்திற்கான ஆதாரங்களை அழிப்பது ) ஆகியவற்றின் கீழ் நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம், மேலும் குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் மற்றும் அவர் மருத்துவர்கள் மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளார்" என டிஜிபி கூறினார். சமூக அவலத்திற்கு பயந்து தனது குழந்தையை இளம் தாய் கொன்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















