மேலும் அறிய

Crime: ஆரணி பகுதியில் பைக்கை திருடும் பலே திருடன் கைது.! போலீசில் சிக்கியது எப்படி.?

ஆரணி களம்பூர் சேத்துப்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்களை இருட்டிய வாலிபரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.அவரிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மறுசூரைச் சேர்ந்தவர் சுரேஷ் இவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க இந்தியன் வங்கிக்கு கடந்த 24-ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது வங்கி முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் அந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்று விட்டார். இது குறித்து ஆரணி நகர காவல்துறையினரிடம் சுரேஷ் புகார் அளித்துள்ளார் . அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேபோல் களம்பூர் அடுத்த எட்டவாடியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அவர்களது இரு சக்கர வாகனத்தை கூட்ரோடு அருகே நிறுத்திச் சென்றுள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்று உள்ளார். இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில்  களம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


Crime: ஆரணி பகுதியில் பைக்கை திருடும் பலே திருடன்  கைது.! போலீசில் சிக்கியது எப்படி.?

சேத்துப்பட்டு பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு 

மேலும் இதே போன்று சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பேருந்து நிலையம் அருகில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்  திருடி சென்றுள்ளார். இது குறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில்  சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில், ஆய்வாளர் விநாயகமூர்த்தி, துணை ஆய்வாளர் சுந்தரேசன் ,சங்கர், ஆனந்தன் ஆகியோர் காமராஜர் சிலை அருகில் வாகன சோதனையில் நேற்று மாலை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மடக்கி விசாரணை செய்தனர். அந்த  வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.


Crime: ஆரணி பகுதியில் பைக்கை திருடும் பலே திருடன்  கைது.! போலீசில் சிக்கியது எப்படி.?

இருசக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது 

அதனை தொடர்ந்து அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாதுரை சேர்ந்த தனுஷ் என்கிற வீரா வயது (23) என்பதும் ஆரணி, களம்பூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் 3 இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்துள்ளது. தனுஷ் கொடுத்த தகவலின் பெயரில் தேடப்பட்ட மூன்று இரு சக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு மட்டுமின்றி தனுஷ் மீது சென்னை, விழுப்புரம், சேத்துப்பட்டு உட்பட பல காவல் நிலையங்களில் வழிப்பறி, இரு சக்கர வாகன திருட்டு மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தனுஷை ஆரணி நகர காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆரணி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Embed widget