மேலும் அறிய

Crime: நீடாமங்கலத்தில் காணாமல் போன இளைஞர் ஆற்றில் புதைந்த நிலையில் மீட்பு

நீடாமங்கலத்தில் காணாமல் போன இளைஞர் ஆற்றில் புதைந்த நிலையில் மீட்பு. கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே முல்லைவாசல் கிராமத்தில் கோரையாற்றில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்து ஆற்றில் புதைத்துள்ளனர். இது தொடர்பாக உடலை கைப்பற்றி நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே முல்லை வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம் இவரது மகன் திருமாவளவன் 24. இவர் கும்பகோணம் பகுதியில் அறுவடை இயந்திரம் ஓட்டி வருகிறார்.
 
இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி அன்று உறவினர் வீட்டு துக்க  நிகழ்ச்சிக்கு கும்பகோணத்துக்கு  குடும்பத்துடன் சென்று வந்த நிலையில், அன்று இரவில் இருந்து திருமாவளவன் வீட்டுக்கு வரவில்லை. வழக்கம்போல் அறுவடை இயந்திரம் ஓட்டும் வேலைக்கு வீட்டில் சொல்லாமல் சென்று விட்டதாக திருமாவளவனின் குடும்பத்தினர் நினைத்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் திருமாவளவனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை அறிந்து, அவரது அறுவடை இயந்திர உரிமையாளரிடம் குடும்பத்தார் விசாரித்துள்ளனர். அதில், திருமாவளவன் வேலைக்கு வரவில்லை என தெரியவந்தது. 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவனின் தந்தை ஆசீர்வாதம் மற்றும் அவரது குடும்பத்தினர் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது ஒரு புறம் இருக்க, முல்லைவாசல் மதகடி அருகே மணல் லாரியில் மணல் ஏற்றி வந்த நபர்கள், மனித உடல் ஒன்று புதைக்கப்பட்டு இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் நிகழ்விடத்துக்கு வந்து தோண்டி எடுத்துப் பார்த்ததில் திருமாவளவனின் உடல் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைச் சம்பவம் எதனால் நடந்தது என்பது குறித்து நீடாமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமாவளவனின் நண்பர் ஸ்ரீதர் என்பவரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Crime: நீடாமங்கலத்தில் காணாமல் போன இளைஞர் ஆற்றில் புதைந்த நிலையில் மீட்பு
 
இது குறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இடம் கேட்ட பொழுது இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய நண்பர் ஸ்ரீதர் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் விரைவில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்
 
 
 

தலைப்பு செய்திகள்

திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Embed widget