மேலும் அறிய

Crime: அலறி துடித்த 10 வயது சிறுவன்.. இரக்கமே இல்லாமல் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்- பஞ்சாபில் ஷாக்

பஞ்சாப் மாநிலத்தில் 10 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Crime: பஞ்சாப் மாநிலத்தில் 10 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம். ஆனால், சில ஆசிரியர்கள் மிகவும் மோசமாக நடத்துக் கொள்கிறார்கள். நற்பண்புகளை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரிகளில் விளிம்பு நிலை மாணவர்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் சமூகம் எந்தளவுக்கு பின்தங்கியுள்ளது என்பதை காட்டுகிறது.

சமீபத்தில் கூட சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் சக மாணவர்களை விட்டு, இஸ்லாமிய சிறுவனை ஆசிரியை அறையச் சொன்ன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்தில் 10 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

10 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்:

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருக்கும் ஒரு பள்ளியில் 10 வயது பள்ளி மாணவனை ஒரு ஆசிரியர் ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கியுள்ளார். அதாவது, இரண்டு மாணவர்களை அழைத்து அந்த சிறுவனின் கை, கால்களை பிடித்து கொள்ள வைத்து, குச்சியால் கொடூரமாக தாக்கியுள்ளார். அந்த சிறுவனை மிகக் கொடூரமாக தாக்கிய ஆசிரியர், இதுகுறித்து வீட்டில் சொல்லக் கூடாது என்று மிரட்டி இருக்கிறார்.

இதுபற்றி வீட்டில் சொன்னால் பள்ளியில் இருந்து டிசி கொடுத்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுவனும் இதுப்பற்றி வீட்டில் சொல்லாமல் பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தார். இரண்டு  நாட்கள் அந்த சிறுவனை ஆசிரியர் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் சிறுவன் முதலில் எதையும் சொல்லாமல் அமைதியாகவே இருந்துள்ளார்.

ஷாக் வீடியோ: 

இருப்பினும், அந்த சிறுவன் நடக்கும்போது  சிரமப்படுவதை அவரது தாய் பார்த்துள்ளார். இதனால், சிறுவனிடம் என்னாச்சு என்று கேட்டிருக்கிறார். அதன்பிறகு பள்ளியில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாயிடம் கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த தாய், முதலில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். பின்னர், இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், இரண்டு மாணவர்கள் பிடித்துக் கொள்ள அந்த ஆசிரியர் 10 வயது சிறுவனை கொடூரமாக தாக்கியிருக்கிறார். அந்த சிறுவன் தள்ளி செல்ல முயன்றார். அப்போது கூட, தொடர்ந்து அந்த ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர் ஷெர்பூர் கலான் பகுதியைச் சேர்ந்த   ஸ்ரீ பகவான் என அடையாளம்  காணப்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget