மேலும் அறிய

Crime: 'என்னை கல்யாணம் பண்ணு..' ஓடும் ஆட்டோவில் பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் - ஒருதலைக் காதலால் விபரீதம்!

தான் காதலித்து வந்த உறவுக்காரப் பெண் வேறு நபருடன் திருமணம் செய்விருந்ததை ஏற்க முடியாமல், ஓடும் ஆட்டோவில் அவரது கழுத்தை அறுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் ,குன்னூரைச் சேர்ந்தவர் ராஹிலா (வயது 25). பிஎஸ்சி படித்து முடித்துள்ள இவர் அந்தியூர் அடுத்த மைக்கேல்பாளையத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். மேலும், புதுப்பாளையம் பகுதியில் தோழியுடன் அறை எடுத்து தங்கியிருந்த ராஹிலா தினமும் பள்ளி பேருந்தில் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி ராஹிலாவை அவரது பெரியம்மா மகன் ஜீவா (வயது 35) பள்ளிக்கு சென்று சந்தித்துள்ளார். தொடர்ந்து இருவரும் ராஹிலா தங்கியிருந்த பகுதியில் இருந்து ஆட்டோவில் அந்தியூர் பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

கழுத்தை அறுத்த இளைஞன்:

அப்போது செல்லும் வழியிலேயே ஜீவா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஹிலாவை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த  ஜீவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஹிலாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். தொடர்ந்து ராஹிலா ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த நிலையில், ஓட்டுநர் உடனடியாக ஆட்டோவை காவல் நிலையத்தை நோக்கி ஓட்டியுள்ளார்.

ஆனால் ஜீவா ஆட்டோவில் இருந்து குதித்து தப்ப முயன்ற நிலையில், பொது மக்கள் அவரை விரட்டிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது ராஹிலா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

லண்டனில் வேலை:

இந்நிலையில், காவல் துறையினர் விசாரணையில் நீலகிரி, கூடலூர் முக்கூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா எம்ஏ முடித்துள்ளதும், லண்டனில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக  சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், ”ராஹிலாவுக்காக கூடலூர் பகுதியில் 10 லட்சத்தில் ஒரு வீட்டையும் 20 சென்ட் நிலத்தையும் முன்னதாக வாங்கியுள்ள ஜீவா, அவரை திருமணம் செய்வதற்காக மூன்று ஆண்டுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியதுடன் அங்கு கடுகு, ஏலம் விவசாயமும் செய்து வருகிறார். இந்துவான ஜீவா, தன் தாய் ஜெரினா சார்ந்த இஸ்லாமிய மத வழக்கப்படி தனது சித்தி மகளான ராஹிலாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

ஆனால் இதனை இவர்களது பெற்றோர் ஏற்காத நிலையில், ராஹிலாவுக்கு 15 நாள்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் பேசி நிச்சயம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தியூரில் இருந்து புறப்பட்டு ராஹிலாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ள ஜீவா அழைத்துள்ளார். ஆனால் அதற்கு ராஹிலா மறுப்பு தெரிவித்த நிலையில், ராஹிலாவின் கழுத்தை அறுத்து ஜீவா கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்” எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜீவாவை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

 

தலைப்பு செய்திகள்

15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget