மேலும் அறிய

ATM robbery case: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 7வது நபருக்கு நீதிமன்ற காவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏழாவது நபர் வாகித் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 72 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் கொள்ளையர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். அதன் பேரில் கர்நாடகா, ஆந்திரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர் அரியானா மாநிலத்தில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு திருவண்ணாமலை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இருவரையும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கவியரசன் முன்னிலையில் ஆஜர் படுத்தியதை அடுத்து நீதிபதி அவர்களை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கொள்ளையர்கள் இருவருக்கும் பண பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக இருந்ததாக கடந்த மாதம் 21ஆம் தேதி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குதரத்பாஷா மற்றும் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்து தந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்சர் உசேன் ஆகிய இருவரையும் திருவண்ணாமலை போலீசார் கைது செய்து அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 


ATM robbery case: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 7வது நபருக்கு நீதிமன்ற காவல்

 

கொள்ளையர்கள் இருவருக்கும் 14 நாள் நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில்  கொள்ளையடிக்க பயன்படுத்திய டாட்டா சுமோ காரை திருப்பதியில் இருந்து திருடி வந்து கொள்ளையர்களுக்கு உதவிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீனை போலீசார் கடந்த 5- ஆம் தேதி கைது செய்ததுடன் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா சுமோ காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கொள்ளையனை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர்.  நிஜாமுதீனுக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருக்க  நீதிபதி உத்தரவிட்ட நிலையில் போலீசார் நிஜாமுதீனை பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 14.03.2023 அன்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிராஜுதீன் என்பவரை கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாடு போலீசார் கைது செய்ததுடன் கொள்ளைக்கு பயன்படுத்திய கன்டெய்னர் லாரியையும் நேற்று பறிமுதல் செய்தனர். 

 


ATM robbery case: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 7வது நபருக்கு நீதிமன்ற காவல்

அதனைத் தொடர்ந்து இன்று 7வது நபராக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த வாகித் என்பவரை ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழ்நாடு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கவியரசன் முன்பு ஆசர்படுத்தப்பட்ட  வாகித்திற்கு வருகின்ற 29ஆம் தேதி வரை (14 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் குறித்து காவல்துறையினர் தனிப்படைகள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர் என திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தகவல் தெரிவித்தார்.

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
TVK Vijay alliance: விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Embed widget