மேலும் அறிய

ATM robbery case: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 7வது நபருக்கு நீதிமன்ற காவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏழாவது நபர் வாகித் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 72 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் கொள்ளையர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். அதன் பேரில் கர்நாடகா, ஆந்திரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர் அரியானா மாநிலத்தில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு திருவண்ணாமலை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இருவரையும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கவியரசன் முன்னிலையில் ஆஜர் படுத்தியதை அடுத்து நீதிபதி அவர்களை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கொள்ளையர்கள் இருவருக்கும் பண பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக இருந்ததாக கடந்த மாதம் 21ஆம் தேதி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குதரத்பாஷா மற்றும் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்து தந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்சர் உசேன் ஆகிய இருவரையும் திருவண்ணாமலை போலீசார் கைது செய்து அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 


ATM robbery case: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 7வது நபருக்கு நீதிமன்ற காவல்

 

கொள்ளையர்கள் இருவருக்கும் 14 நாள் நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில்  கொள்ளையடிக்க பயன்படுத்திய டாட்டா சுமோ காரை திருப்பதியில் இருந்து திருடி வந்து கொள்ளையர்களுக்கு உதவிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீனை போலீசார் கடந்த 5- ஆம் தேதி கைது செய்ததுடன் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா சுமோ காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கொள்ளையனை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர்.  நிஜாமுதீனுக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருக்க  நீதிபதி உத்தரவிட்ட நிலையில் போலீசார் நிஜாமுதீனை பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 14.03.2023 அன்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிராஜுதீன் என்பவரை கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாடு போலீசார் கைது செய்ததுடன் கொள்ளைக்கு பயன்படுத்திய கன்டெய்னர் லாரியையும் நேற்று பறிமுதல் செய்தனர். 

 


ATM robbery case: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 7வது நபருக்கு நீதிமன்ற காவல்

அதனைத் தொடர்ந்து இன்று 7வது நபராக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த வாகித் என்பவரை ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழ்நாடு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கவியரசன் முன்பு ஆசர்படுத்தப்பட்ட  வாகித்திற்கு வருகின்ற 29ஆம் தேதி வரை (14 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் குறித்து காவல்துறையினர் தனிப்படைகள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர் என திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தகவல் தெரிவித்தார்.

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
Embed widget