மேலும் அறிய

Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? - சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !

”தாக்குதல் காரணமாக அவர் இறந்திருந்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” - ஏ.எஸ்.பி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது குன்றக்குடி முருகன் கோயில். இந்த கோயிலை சுற்றி ஏராளமான கிரமங்கள் உள்ளது. அதே போல் கோயிலை சார்ந்து பல்வேறு கடைகளும் இயங்குகிறது . இதன் மூலம் ஏராளமான குடும்பத்தினர் வருவாய் ஈட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற சூழலில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றிவந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் பல்வேறு இடங்களுக்கு சென்று கிடைத்ததை வாங்கிச் சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். யாருக்கும் பெரிய தொந்தரவுகள் எதுவும் கொடுக்காமல் அப்பகுதியை சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
 


Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? - சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
 
இந்நிலையில் குன்றக்குடி கோயில் வாசல் அருகே உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றுக்கு சென்றதாகவும், அப்போது அதன் கடை உரிமையாளர் தாக்கியதியதில் உடல் நலம் பாதித்து இறந்ததாக சொல்லப்படுகிறது. இறந்த  நபர் அடித்து துன்புறுத்திய காரணத்தால் தான் இறந்ததாகவும், எனவே  அவரை தாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? - சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
 
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த நபர்களிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், “கடந்த 30-ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பையன் பேன்சி ஸ்டோர் கடை முன்பாக நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து கடையின் உரிமையாளர் பாலசுப்ரமணியன் மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து துன்புறுத்தினார். அங்கிருந்த கம்புகளை வைத்தும் தாக்கினார். உடலில் உள்ள முக்கிய உறுப்பின் மீது மிதித்ததில் அவர் கடுமையாக பாதித்து மயங்கினார். இதையடுத்து அனைவரும் செல்லவும் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்துவிட்டு மீண்டும் கடைபகுதிகளில் விட்டுவிட்டார். இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்து சளிகள் கக்கியபடி கடந்த 2-ம் தேதி இறந்துவிட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவர் தாக்குதல் காரணமாக இறந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்து வருகின்றனர். நான் சம்பவத்தை நேரில் பார்த்த விஷயங்கள் கேட்ட விஷயங்களை காவல்துறையினரிடன் தெரிவித்துள்ளேன்" என்றார்.

Crime: மனநலம் பாதித்த நபரின் மரணம் கொலையா ? - சிவகங்கையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் !
 
போலீஸ் விசாரணை குறித்து  ஏ.எஸ்.பி ஸ்டாலின் கூறுகையில், “இது தொடர்பான விசாரணை நடத்த சொல்லி இருக்குகிறேன். மனநலம் பாதிக்கப்பட்டவரை கடையின் அருகே தள்ளி வேறு இடத்திற்கு செல்ல சொல்லியதாக தெரியவருகிறது. சி.சி.டி.வி கேமராக்களும் அப்பகுதியில் இல்லை. எனினும் உடல் கூறு ஆய்வில் வெளிவரும் தகவலின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது வரை வழக்கு சந்தேக மரணமாக பதியப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக அவர் இறந்திருந்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Embed widget