மேலும் அறிய

சந்தேகத்தால் 6 வயது மகனை கிணற்றில் தள்ளிவிட்டு கொன்ற தந்தை கைது - தென்காசியில் பயங்கரம்

தான் பெற்ற மகனை சந்தேகத்தின் பேரில் தந்தையே கிணற்றுள் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் முனியாண்டி. இவர் இந்த பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். முனியாண்டிக்கு திருமணமாகி கார்த்திகை செல்வி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது. இவர்கள் தென்மலையில் உள்ள செல்லப்பாண்டியன் தெருவில் வசித்து வருகின்றனர். மேலும் மகிழன் அருகில் உள்ள செல்வ விநாயகர் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பி நின்ற மகிழனை அப்பா முனியாண்டி பள்ளிக்கு அழைத்துக் கொண்டு சென்று பள்ளியில் விட்டு விட்டு பின்பு வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின் பள்ளியில் மகிழனின் புத்தகப் பையை வைத்து விட்டு மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்றுள்ளார். அதன்பின் இருவருமே வீடு திரும்பாத நிலையில் மனைவி கார்த்திகை செல்வி பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அதன்பின் மகிழனை காணவில்லை என அனைவரும் தேட ஆரம்பித்துள்ளனர். பின் கார்த்திகை செல்வி அருகே உள்ள சிவகிரி காவல் நிலையத்தில் சென்று புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேட ஆரம்பித்தனர். குறிப்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மகிழனை அவரது அப்பா முனியாண்டி அழைத்துச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து முனியாண்டியின் செல்போன் அலைவரிசையை வைத்து தேடினர்,. அப்போது முனியாண்டியின் டவர் லொகேஷன் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் காண்பித்ததை அடித்து  அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முனியாண்டி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். அதன்பின் முனியாண்டியை பிடித்து விசாரித்த போது, மகிழனை அழைத்து சென்று கிணற்றின் அருகே இருந்து மது அருந்திய நிலையில் மகன் மகிழனை நான் தான் கிணற்றுக்குள் தள்ளி விட்டுக்கொன்றேன் என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் எதற்காக கொலை செய்தாய் என காவல்துறையினர் தீவிர விசாரணை  நடத்தியதில் முனியாண்டியின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டின் அருகே தண்ணீர் பிடிக்கும் போது இரண்டு பெண்களுக்கிடையே வாய் வார்த்தை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் அந்த பெண் மனைவி கார்த்திகை செல்வியை பார்த்து இது உனக்கு பிறந்த பிள்ளையா என கூறியதை முனியாண்டி கேட்டுள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் மகிழன் உன்னுடைய மகன் இல்லை என சுற்றியுள்ளவர்கள் கூறியதாகவும், அதனால் தான் மகிழனை கிணற்றுக்குள் தள்ளி விட்டு கொலை செய்ததாகவும் முனியாண்டி ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முனியாண்டியிடம் காவல்துறையினர் விசாரணை செய்த பொழுது தன்னுடைய மகனை புளியங்குடி அருகே உள்ள நவாச்சாரியார் பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக அந்த இடத்தை அடையாளம் காட்டினார். அதனையடுத்து  சிவகிரி காவல்துறையினர் வாசுதேவநல்லூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த அவர்கள் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மகிழனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் முனியாண்டியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றனர். தான் பெற்ற மகனை சந்தேகத்தின் பேரில் தந்தையே கிணற்றுள் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!  
தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!  
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் !! கருவைக் கலைக்கத் துடிக்கும் தந்தை - இளம்பெண் புகார்
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் !! கருவைக் கலைக்கத் துடிக்கும் தந்தை - இளம்பெண் புகார்
Kovai Child Murder Case: சூலூர் சிறுமி மரண வழக்கில் சிக்கிய அரக்கர்கள்... கோவையை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்...
Kovai Child Murder Case: சூலூர் சிறுமி மரண வழக்கில் சிக்கிய அரக்கர்கள்... கோவையை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்...
Kovai Girl murder case : கோவை சிறுமி கொலை.! 2 குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? வெளியான ஷாக் தவகல்
கோவை சிறுமி கொலை.! 2 குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? வெளியான ஷாக் தவகல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
TN Govt Power Cut: நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
Vijay vs Eps : வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
TVK VIJAY: ”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
Embed widget