மேலும் அறிய

Crime: குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காத காதல் மனைவி; ஆத்திரத்தில் சுட்டுக்கொலை செய்த கணவர் - பீகாரில் ஷாக்!

குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காததால் மனைவியை, கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காததால் மனைவியை, கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கொன்ற கணவர்:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோபா குமாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த கஜேந்திர குமார் என்பவரை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சோபா குமாரிக்கு நீண்ட ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத சோபா குமாரிக்கு, தற்போது தான் காவல்துறையில் வேலை கிடைத்திருக்கிறது. இதனால், சோபா குமாரிக்கு வீட்டில் நேரம் ஒதுக்க முடியவில்லை. குழந்தையையும் பார்க்க முடியவில்லை.

இதனால் அவரது கணவர் கஜேந்திர குமார் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது. பிறகு, கஜேந்திர குமார் தன் மனைவி அவரது பணிக்கே அதிக நேரம் செலவழிப்பதாகவும், இதனால் அந்த பணியில் இருந்து விலக வேண்டும் என்றும் விரும்பி உள்ளார். வேலையை விட வேண்டும் என்று மனைவியிடம் பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் மனைவி சோபா குமார் வேலையில் விலகாமல் இருந்ததால், அவரது கணவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் தந்தைக்கு மருந்து வாங்கி வர டெல்லிக்கு சென்றிருந்தார் கஜேந்திர குமார். டெல்லி சென்று திரும்பிபோது, மனைவி சோபா குமாரியை பாட்னா ஜங்ஷன் அருகே உள்ள ஹோட்டலுக்கு அழைத்திருக்கிறார் கஜேந்திர குமார். இதனால், ஹோட்டலுக்கு வந்திருந்தார் மனைவி சோபா குமாரி.

கைது:

அப்போது, வேலையை விட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால், இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், கஜேந்திர குமார் தான் தயாராக வைத்திருந்த துப்பாக்கியால் சோபா குமாரியை சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

இதனை அறிந்த போலீசார் ஹோட்டலுக்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த சோபா குமாரியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கஜேந்திர குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டலில் மனைவியைக் கொலை செய்த பின்னர், சுமார் 36 மணி நேரம் கழித்து கஜேந்திர குமார் போலீசாரிடம் சிக்கி உள்ளார். தன் மனைவி வேலை கிடைத்த பிறகு  குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காததால்  மன உளைச்சலுக்கு ஆளாகி, மனைவியைக் கொலை செய்ததாக கஜேந்திர குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.


மேலும் படிக்க

TR Balu Statement: "ஆளுநர் மாளிகையே... அடக்கிடு வாயை..." - ஆளுநரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட டி.ஆர் பாலு..

தலைப்பு செய்திகள்

பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Embed widget