மேலும் அறிய

Crime: குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காத காதல் மனைவி; ஆத்திரத்தில் சுட்டுக்கொலை செய்த கணவர் - பீகாரில் ஷாக்!

குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காததால் மனைவியை, கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காததால் மனைவியை, கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கொன்ற கணவர்:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோபா குமாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த கஜேந்திர குமார் என்பவரை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சோபா குமாரிக்கு நீண்ட ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத சோபா குமாரிக்கு, தற்போது தான் காவல்துறையில் வேலை கிடைத்திருக்கிறது. இதனால், சோபா குமாரிக்கு வீட்டில் நேரம் ஒதுக்க முடியவில்லை. குழந்தையையும் பார்க்க முடியவில்லை.

இதனால் அவரது கணவர் கஜேந்திர குமார் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது. பிறகு, கஜேந்திர குமார் தன் மனைவி அவரது பணிக்கே அதிக நேரம் செலவழிப்பதாகவும், இதனால் அந்த பணியில் இருந்து விலக வேண்டும் என்றும் விரும்பி உள்ளார். வேலையை விட வேண்டும் என்று மனைவியிடம் பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் மனைவி சோபா குமார் வேலையில் விலகாமல் இருந்ததால், அவரது கணவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் தந்தைக்கு மருந்து வாங்கி வர டெல்லிக்கு சென்றிருந்தார் கஜேந்திர குமார். டெல்லி சென்று திரும்பிபோது, மனைவி சோபா குமாரியை பாட்னா ஜங்ஷன் அருகே உள்ள ஹோட்டலுக்கு அழைத்திருக்கிறார் கஜேந்திர குமார். இதனால், ஹோட்டலுக்கு வந்திருந்தார் மனைவி சோபா குமாரி.

கைது:

அப்போது, வேலையை விட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால், இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், கஜேந்திர குமார் தான் தயாராக வைத்திருந்த துப்பாக்கியால் சோபா குமாரியை சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

இதனை அறிந்த போலீசார் ஹோட்டலுக்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த சோபா குமாரியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கஜேந்திர குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டலில் மனைவியைக் கொலை செய்த பின்னர், சுமார் 36 மணி நேரம் கழித்து கஜேந்திர குமார் போலீசாரிடம் சிக்கி உள்ளார். தன் மனைவி வேலை கிடைத்த பிறகு  குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காததால்  மன உளைச்சலுக்கு ஆளாகி, மனைவியைக் கொலை செய்ததாக கஜேந்திர குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.


மேலும் படிக்க

TR Balu Statement: "ஆளுநர் மாளிகையே... அடக்கிடு வாயை..." - ஆளுநரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட டி.ஆர் பாலு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
MS Dhoni:  நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: ஹாட்ரிக் அடித்த காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
MS Dhoni:  நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
Embed widget