மேலும் அறிய

Crime: கணவருடன் ஏற்பட்ட சண்டையால் 4வயது சிறுமி கொலை.. போலீஸ் ரோந்து வாகனம் வந்ததும் தாய் செய்த செயல்..!

நாக்பூரில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தாயே தான் பெற்ற 4 வயது மகளை கழுத்தை நெரிந்து கொன்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் 4 வயது சிறுமியை கழுத்தை நெரிந்து கொன்ற கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த 4 வயது சிறுமியை கொன்றவர் வேறு யாருமல்ல, சிறுமியின் தாய்தான் என்றால் உங்களால் நம்பமுடியுமா? ஆனால், அதுதான் உண்மை. 

கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தான் பெற்ற 4 வயது மகளை கழுத்தை நெரிந்து கொன்றுள்ளார். அதன் பின்னர், அந்த பெண் இறந்த குழந்தையின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் நான்கு கிலோ மீட்டர் தூக்கி சுற்றிய கொடுமையும் நடந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், “ இந்த கொலையானது நாக்பூரை அடுத்த எம்.ஐ.டி.சி காவல் நிலையப் பகுதியில் கடந்த திங்கள் கிழமை நடந்துள்ளது. இதுபற்றி கொலை செய்த தாயே காவலர்களுக்கு தகவல் கொடுத்திருப்பதுதான் ஆச்சரியமான விஷயம். சிறுமியை கொலை செய்தபின் நாக்பூர் நகரின் தெருக்களில் 4 கிலோமீட்டர் தூரம் தன் மகளின் பிணத்தை தூக்கி கொண்டு சுற்றி திரிந்துள்ளார்.” என தெரிவித்தனர். 

என்ன நடந்தது..? முழு விவரம் இதோ:

4 வயது தனது மகளை கொலை செய்த பெண்ணின் பெயர் ட்விங்கிள் ரவுத். இவருக்கு தற்போது 23 வயதாகிறது. இவரது கணவர் ராம் லக்‌ஷ்மண் (24) ஆகியோர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த கையோடு வேலை தேடி நாக்பூருக்கு வந்துள்ளனர். அதன்பின்னர், இருவரும் காகித தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து எம்.ஐ.டி.சி பகுதியில் உள்ள ஹிங்னா சாலையில் உள்ள நிறுவன வளாகத்தில் உள்ள அறையில் வசித்து வந்தனர். 

நீண்ட நாட்களாக இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக   திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஒருவருக்கு மேல் ஒருவர் கொண்ட சந்தேகத்தின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் தம்பதியர் மீண்டும் சண்டையிட்டுள்ளனர். இருவருக்கும் இடையேயான கடும் வாக்குவாதத்திற்கு இடையே இவர்களது 4வது வயது மகள் அழ தொடங்கியுள்ளார். 

இதனால் கோபமடைந்த அந்த பெண், தனது மகளை வீட்டிற்கு வெளியே அழைத்துசென்று, அங்குள்ள மரத்தடியில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தனது மகளின் சடலத்துடன் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். இரவு எட்டு மணியளவில், அந்த பெண் போலீஸ் ரோந்து வாகனத்தை பார்த்து, பின்னர் தானே அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்கு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். 

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனது சொந்த மகளை கொலை செய்த ட்விங்கிள் ரவுத்தை காவல்துறையினர் கைது செய்து, இந்திய தண்டனைச் ச்ட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண், வருகின்ற மே 24ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
தகர கொட்டகை அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
Embed widget