மேலும் அறிய

குளித்தலை அருகே கல்லூரி மாணவர் ரயில் மீது பாய்ந்து தற்கொலை - காதல் தோல்வியா? என விசாரணை

கல்லூரி மாணவன் இறப்புக்கு குடும்ப பிரச்னை காரணமா அல்லது காதல் தோல்வியா என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை ரயில்வே நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை நீண்ட நேரமாக அமர்ந்து இருந்துள்ளார். அப்போது திருச்சியில் இருந்து சரக்கு ரயில்வே ஒன்று குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்தது.  அப்போது ரயில் வந்த தண்டவாளத்தில் நடுப்பகுதியில் அந்த இளைஞர் திடீரென வந்து நின்றுள்ளார். இதைபார்த்த சரக்கு ரயில் எஞ்ஜின் டிரைவர் ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார்.

 

 


குளித்தலை அருகே கல்லூரி மாணவர் ரயில் மீது பாய்ந்து தற்கொலை - காதல் தோல்வியா? என விசாரணை

இருப்பினும் அந்த இளைஞர் ரயில் தண்டவாளத்தை விட்டு நகர்ந்து செல்லாமல் சரக்கு ரயிலுக்கு முன் நேருக்கு நேர் நின்று கொண்டு இருந்துள்ளார். இதனால் ரயில் இளைஞர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை  அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சிலர் நேரடியாக பார்த்துள்ளனர். உடனே, இதுகுறித்து கரூர் ரயில்வே போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

 


குளித்தலை அருகே கல்லூரி மாணவர் ரயில் மீது பாய்ந்து தற்கொலை - காதல் தோல்வியா? என விசாரணை

அங்கு வந்த ரயில்வே  ஊழியர்கள் இளைஞரின் உடையில் இருந்த  கல்லூரி மாணவர் அடையாள அட்டையை எடுத்து பார்த்தனர். அப்போது அந்த இளைஞரின் பெயர் கோபிநாத் (வயது 20) என்றும், அதனுடைய சேர்ந்த அவர் அய்யர் மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி பி. காம். சி.ஏ. படித்து வந்தது தெரியவந்தது. 

 

 


குளித்தலை அருகே கல்லூரி மாணவர் ரயில் மீது பாய்ந்து தற்கொலை - காதல் தோல்வியா? என விசாரணை

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கரூர் ரயில்வே போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், கோபிநாத் எதற்காக ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டார் என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


குளித்தலை அருகே கல்லூரி மாணவர் ரயில் மீது பாய்ந்து தற்கொலை - காதல் தோல்வியா? என விசாரணை

 

மேலும், தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் கோபிநாத் யாரையாவது காதலித்து உள்ளாரா அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனையா அல்லது கல்லூரி சம்பந்தமான ஏதேனும் பிரச்சனையா என பல்வேறு கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் குளித்தலை அருகே சரக்கு ரயில் மீது கல்லூரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி மட்டுமில்லாது கரூர் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
Maruti Suzuki: பட்ஜெட் கார் பிரியர்கள் ஷாக்..! ஸ்விஃப்ட் டூ எர்டிகா, விலையை உயர்த்திய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
பட்ஜெட் கார் பிரியர்கள் ஷாக்..! ஸ்விஃப்ட் டூ எர்டிகா, விலையை உயர்த்திய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
Gold rate today : ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை என்ன.?
ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை என்ன.?
Cm Vijay vs EV Velu : முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
Embed widget