மேலும் அறிய

சென்னை அருகே பெருஞ்சோகம்... பிரிந்த கணவன், மனைவி உயிர்.. டயரில் இருந்த ரத்தக்கறை

சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் நடைபெற்ற கொடூர விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை சோனலூர் சந்திப்பில் முன்னே சென்ற பைக் மீது பேருந்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி இருவரும் பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தனர்.‌ விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுனரை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகமாக சென்ற பேருந்து

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் மாம்பாக்கம் அருகே  சோனலூர் சந்திப்பில், முன்னே சென்ற பைக் மீது தனியார் பேருந்து அதி வேகமாக  மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு  தப்பி சென்றது. பைக்கில் சென்ற கணவன் மனைவி டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கேளம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது உடல் நசுங்கி இறந்து கிடந்த  இரண்டு உடல்களை மீட்டனர். பின்னர் தப்பி சென்ற பேருந்து புதுப்பாக்கம் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு அதே சாலை எதிர்புறத்தில், புதுப்பாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் வழியாக ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த போது கேளம்பாக்கம் போலீசார் தனியார் நிறுவனத்தின் பேருந்தை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

டயரை சோதனை செய்த போலீஸ்..

அப்போது பேருந்து ஓட்டுநர் கோட்டீஸ்வரன் முன்னுக்குப் பின் முரணாக பேசி நழுவிய நிலையில் பேருந்து டயரை போலீசார் சோதனை செய்தபோது டயரில் ரத்த கரைகளைப் படிந்து இருந்ததை உறுதிப்படுத்தினர். பின்னர் பேருந்து ஓட்டுநர் கோடீஸ்வரனை கைது செய்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உயிரிழந்த இருவரும் கணவன் மனைவி என்பதும் மாடம்பாக்கம் ஸ்ரீராம் நகர்,  நூத்தாஞ்சேரி, இரண்டாவது தெருவை சேர்ந்த தாமோதரன் மற்றும் அவரது மனைவி ஜெய் துர்கா என்பது தெரியவந்தது.  

பின்னர் கணவன் மனைவி இருவர் உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கணவன் மற்றும் மனைவி இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் விபத்துக்கள் 

வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் தனியார் நிறுவன வாகனங்களால் அவ்வப்பொழுது விபத்து ஏற்படுவது தொடர்கதை ஆகியுள்ளது.‌ வாகனங்கள் அதிவேகமாக செல்வதை போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்று விட்டு திரும்ப வருபவர்கள் அதிகமாக செல்லும் சாலை என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
Ash Wednesday 2025: சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்றால் என்ன? முழு விவரம்
Ash Wednesday 2025: சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்றால் என்ன? முழு விவரம்
IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
Embed widget