மேலும் அறிய

Marriage Dispute: ”ஓபன் மேரேஜ், நண்பர்களுடன் உடலுறவு, ஸ்பை கேமரா” சென்னை தொழிலதிபரை ரவுண்டு கட்டிய மனைவி

Marriage Dispute: தாசிகளுடன் உறவு, கட்டாயப்படுத்தி ஒபன் மேரேஜ் செய்தார் என சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மீது, அவரது மனைவி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Marriage Dispute: சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மீது அவரது மனைவி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி அடுக்கும் குற்றச்சாட்டுகள்:

சென்னையை சேர்ந்த தொழிலதிபரான பிரசன்னா சங்கர் பிரபல நிறுவனமான ரிப்ளிங்கின் இணை நிறுவனர் ஆவார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவி திவ்யா சசிதரனிடமிருந்து, தனது மகனை பராமரிக்கும் உரிமைக்காக போராடி வருவதாக அண்மையில் சமூக வலைதளத்தில் நீண்ட பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மனைவியின் தொல்லை தாங்காமல் ஊரை வீட்டே ஓடுவதாகவும், அவர் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவதாகவும், விவாகரத்திற்கு கூடுதல் பணத்தை கேட்டு மனைவி மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தான், தனது கணவருக்கு தாசிகளுடன் உறவு இருந்ததாகவும், ஓபன் மேரேஜிற்கு ஒப்புக் கொள்ள தன்னை கட்டாயப்படுத்திதாகவும் திவ்யா குற்றம்சாட்டியுள்ளார்.

"வீட்டில் ரகசிய கேமரா"

கணவர் மீதான குற்றச்சாட்டுகல் தொடர்பாக பேசிய திவ்ய, “ பிரன்னா  பாலியல் தொழிலாளர்களுடன் உறவு வைத்திருந்தார். வற்புறுத்தி ஓபன் மேரேஜ் அதாவது திருமணத்தை மீறியும் பிறருடன் உறவு வைத்துக் கொள்ளும் முறைக்கு சம்மதிக்க வற்புறுத்தினார். என்னை உளவு பார்க்க வீட்டிலேயே ரகசிய கேமராக்களை வைத்தார்” என குற்றம்சாடிட்யுள்ளார். இதற்கான ஆதாரம் என குறிப்பிட்டு மகன் மீதான உரிமைகோரலுக்கான தனது சர்வதேச வழக்கின் நூற்றுக்கணக்கான பக்க நீதிமன்ற ஆவணங்கள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் மற்றும் பிற பதிவுகள் ஆகியவற்றை குறிப்பிட்டு The sanfrancisco standard என்ற அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சொத்து வரியை தவிர்க்க தன்னையும், 9 வயது மகனையும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அலைகழித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

"கட்டாயப்படுத்தி உடலுறவு"

மேலும், ”2016ம் ஆண்டு தான் குழந்தையை பெற்றெடுத்த பிறகு கட்டாயப்படுத்தி தன்னுடன் உடலுறவு கொண்டார். வலியில் இருக்கிறேன் என்னால் முடியாது என கூறினாலும் என்னை வற்புறுத்தினார், மேலும் மறுத்தால் வெளியில் வேறு யாரிடமாவது பெற்றுக்கொள்வோன் என மிரட்டினார். என்னுடன் குறைந்த நேரமே இருந்தபோதிலும், சங்கர் எப்போதும் என்னிடமிருந்து உடலுறவையே எதிர்பார்த்தார்.

இதையும் படியுங்கள்: Marriage Dispute: தகாத உறவு, ரூ.9 கோடி போதாது..! மனைவியின் அராஜகம்? ஊரை விட்டு ஓடிய சென்னை தொழிலதிபர்

”நண்பர்களுடன் உடலுறவு”

பலருடன் அவர் உடலுறவு கொண்டதகாவும், தன்னையும் அவரின் பல நண்பர்களுடன் உடலுறவு கொள்ள வலியுறுத்தினார். அது என்னுடைய மோசமான நாட்களாக இருந்தன.  அவருக்காக நான் எனது தொழில் எதிர்காலத்தையே விட்டுக்கொடுத்தேன். ஆனால் அவரது நடவடிக்கையால் எனது வாழ்க்கையையே தொலைத்துவிட்டதை உணர்ந்தேன். அத்தகைய சூழலில் தான் எங்களது திருமணம் முடிவுக்கு வந்தது” என திவ்யா குற்றம்சாட்டியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கர் - திவ்யா கதை என்ன?

கடந்த 2007ம் ஆண்டு முதன்முறையாக சந்தித்துக்கொண்ட சங்கர் மற்றும் திவ்யா,  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டேட்டிங் செய்யத் தொடங்கியனர். கல்வியில் உயர்நிலை பெற்று தொழில்துறையில் தங்களுக்கான பயணங்களை மேற்கொண்டபடியே,  இருவரும் பல ஆண்டுகளாக நீண்ட தூர உறவைப் (Long-distance relationships) பேணி வந்தனர். தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, திவ்யாவை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து 2016ம் ஆண்டு அந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது.

பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து கிடைத்த அனுபவத்தின் மூலம் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் தனது ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிப்ளிங்கை கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடங்கினார். வேகமாக தொழிலில் பெற்ற வளர்ச்சியால் பில்லியனர் அந்தஸ்தை அடைந்த அவர்,  தற்போது ரிப்ளிங்கின் பங்குகளில் 9 சதவீதத்தை கைவசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இருவருக்கும் இடையே கருத்து மோதல் காரணமாக பிரிந்து வாழ தொடங்கியுள்ளனர். ஆனால், குழந்தையை யார் பராமரிப்பது என்ற விவகாரத்தில் இருவருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி பரஸ்பரம் குற்றங்களை சுமத்தி வருகின்றனர். மனைவி தன்னிடம் விவாகரத்துக்கு கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாக பிரசன்னாவும், கணவர் தன்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்கிறார் என திவ்யாவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget