மேலும் அறிய

Chennai: நடிகை வீட்டுக்குள் அத்துமீறிய நபர்கள்.. கத்தி முனையில் வன்கொடுமை.. சிசிடிவியால் சிக்கிய இருவர்!

பிடிபட்ட இருவரிடமும் போலீசார் அதிரடியாக நடத்திய விசாரணையில், அதிரடி திருப்பம் ஏற்பட்டது. கொள்ளை வழக்காக ஆரம்பித்த இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்காக மாறியது.

குடியிருப்புகள் மிகுந்த வளசரவாக்கம் பகுதியில் வீடு புகுந்து ஒரு துணை நடிகை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைப்பு. சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் பகுதியில் சினிமா துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் அந்த நடிகை வீட்டில் இருந்தபோது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த நடிகை வெளியில் சென்று பார்த்த போது அங்கு 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை யார் என்று கேட்பதற்குள் இருவரும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் இருவரும் அந்த நடிகை வீட்டில் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். இதன் பிறகு அவர் அணிந்திருந்த 4½ பவுன் நகையையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதுமட்டுமின்றி அப்போது அவர்கள் அந்த நடிகையை ஆபாசமாக செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நடிகை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

Chennai: நடிகை வீட்டுக்குள் அத்துமீறிய நபர்கள்.. கத்தி முனையில் வன்கொடுமை.. சிசிடிவியால் சிக்கிய இருவர்!

அவர் அளித்த புகாரில், அடையாளம் தெரியாத இருவர் என்னை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததுடன், பணம், நகையையும் கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி கமி‌ஷனர் கலியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ், சப்-இன்ஸ் பெக்டர் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஏதாவது பதிவாகி உள்ளதா என்று தேடிப்பார்த்துள்ளனர்.

அதன்மூலம் அந்த நடிகையின் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் 2 பேர் செல்வது தெரியவந்தது. வீட்டு அருகில் கேமராக்கள் இல்லாத நிலையில் சற்று தூரத்தில் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இருவரின் உருவமும் பதிவாகி இருந்தது. ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் முதலில் அடையாளம் காணப்பட்டார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரும் கண்ணதாசனும் சேர்ந்து நடிகையின் வீட்டுக்கு சென்று கத்தி முனையில் கொள்ளையடித்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்மூலம் போலீசார் இரு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.

Chennai: நடிகை வீட்டுக்குள் அத்துமீறிய நபர்கள்.. கத்தி முனையில் வன்கொடுமை.. சிசிடிவியால் சிக்கிய இருவர்!

பிடிபட்ட இருவரிடமும் போலீசார் அதிரடியாக நடத்திய விசாரணையில், அதிரடி திருப்பம் ஏற்பட்டது. கொள்ளை வழக்காக ஆரம்பித்த இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்காக மாறியது. துணை நடிகை தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கண்ணதாசனும், செல்வக்குமாரும் அவரது வீட்டுக்குச் சென்று கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கின்றனர். இதன்படி அன்று இரவு இருவரும் துணை நடிகையின் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்ததுடன் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். கைதான செல்வக்குமார் என்பவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி என்று கூறியுள்ளார்.

இவர் சென்னை அயப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கைதான இன்னொரு வாலிபரான கண்ணதாசன் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இருவர் மீதும் 376 ஐ.பி.சி. மற்றும் 397 ஐ.பி.சி. ஆகிய 2 சட்டப்பிரிவுகள் போடப்பட்டு உள்ளன. இதில் 376 சட்டப்பிரிவு கத்திமுனையில் மிரட்டி வழிப்பறி மற்றும் கற்பழிப்பு குற்றத்துக்காக போடப்பட்டு உள்ளது, பிரிவு 397 வழிப்பறி குற்றத்திற்காக போடப்பட்டுள்ளது. இருவரும் அந்த நடிகையிடம் இருந்து பறித்துச் சென்ற நகை, பணத்தை போலீசார் மீட்டுள்ளனர். அதன் பிறகு இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" வெளியே போகலாம் வா " மனைவியைக் காட்டுக்கு அழைத்துச் சென்று கொன்ற கணவன் ! போலீஸ் அதிரடி விசாரணை
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் !! ஆஸ்பத்திரியில் சிக்கிய ‘ போக்ஸோ ' விவகாரம்
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் !! ஆஸ்பத்திரியில் சிக்கிய ‘ போக்ஸோ ' விவகாரம்
குறி பார்க்க வந்த இடத்தில் ஆசை வார்த்தை !! மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு
குறி பார்க்க வந்த இடத்தில் ஆசை வார்த்தை !! மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு
சந்தேகத்தால் கொடூரம்! மனைவியைக் கொலை செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன் கைது!
சந்தேகத்தால் கொடூரம்! மனைவியைக் கொலை செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன் கைது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
TN Minister: பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
Iran Warns America: “மறுபடியும் முட்டாள்தனமான காரியம் ஏதாவது செஞ்சா..“ அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; என்ன கூறியது.?
அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; அசிம் முனீரிடம் கூறியது என்ன.?
Modi Marco Rubio Talks: ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
Ebola-US Ban Entry: மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
iPhone 18 Pro Max Leaks: ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
Embed widget