மேலும் அறிய

12 ஆண்டு கால பழக்கம்..திருமணம் வாக்குறுதி..வெளிநாட்டுக்கு போனவர் ஐதராபாத்தில் கைது

12 ஆண்டுகளாக பழகி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வெளிநாட்டுக்கு தப்பி சென்றவர் கைது

சென்னையில் 12 ஆண்டுகளாக நெருங்கிப் பழகிய பெண்ணை ஏமாற்றி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நபரை கைது செய்த காவல்துறை.
 
12 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி
 
சென்னை குரோம்பேட்டை, ஆர்பிஐ காலனி பகுதியை சேர்ந்தவர் அமீர் சையத் (34). இவர் மீது தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில் அமீர் சையத் தன்னை 12 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னிடம் உறவு வைத்துக் கொண்டு ரூபாய் 20 லட்சம் மற்றும் 25 சவரன் நகையும் மோசடியாக பெற்றுக்கொண்டதாகவும், கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட தன்னை திருமணம் செய்ய மறுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்து வருவதை கேள்விப்பட்டு தான் அமீர் சையத் மற்றும் அவரது பெற்றோர்களிடம் கேட்ட போது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.
 
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
 
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அமீர் சையத் ஐதராபாத் சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு துபாய் சென்று விட்டதாக தெரியவரவே போலீஸார் அமீர் சையத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தனர். அதன் பிறகு கடந்த 26.7.2023 அன்று துபாயிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அமீர் சையத்தை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து வைத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
 
ஆந்திராவில் பதுங்கி இருந்த நபர்
 
அதன்படி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.  ஆனால் அமீர் சையத் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்காமல் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் உயர்நீதி மன்றத்தில் அம்மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து தலைமறைவான அவர் தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகில் டோலிசோக் என்ற இடத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் ஐதராபாத் சென்று அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை செய்து, விசாரணைக்கு பிறகு கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bajaj Freedom CNG Bike: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய அமைச்சர் கட்கரி - சிறப்பம்சங்கள், விலை?
Bajaj Freedom CNG Bike: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய அமைச்சர் கட்கரி - சிறப்பம்சங்கள், விலை?
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bajaj Freedom CNG Bike: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய அமைச்சர் கட்கரி - சிறப்பம்சங்கள், விலை?
Bajaj Freedom CNG Bike: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய அமைச்சர் கட்கரி - சிறப்பம்சங்கள், விலை?
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Breaking News LIVE, July 5: பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவியேற்றார் கியர் ஸ்டாமர்
Breaking News LIVE, July 5: பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவியேற்றார் கியர் ஸ்டாமர்
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Embed widget