மேலும் அறிய

ரூபாய் 5 கோடி மதிப்புள்ள போதை பொருளை கண்டுபிடித்த மோப்ப நாய்..! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

"மெத்தோ குயிலோன் என்ற போதை பொருள் ஒரு கிலோ 542 கிராம் மற்றும் ஹெராயின் போதை பொருள் 644 கிராம் இருந்தன"

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 5.35 கோடி மதிப்புடைய 2.2 கிலோ போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். உகாண்டா நாட்டு பெண் பயணி, உடமைக்குள் மறைத்து வைத்திருந்த போதைப் பொருளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய், முகர்ந்து பார்த்து கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்தது, சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூபாய் 5 கோடி மதிப்புள்ள போதை பொருளை கண்டுபிடித்த மோப்ப நாய்..! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!
எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அஃபாபாவில் இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் உகாண்டாவில் இருந்து எத்தியோப்பியா வழியாக சென்னை வந்தார். 
 
சுங்க அதிகாரிகளுக்கு உகாண்டா பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் பயணி, சுற்றுலா பயணியாக வந்த என்னை வரவேற்காமல், குற்றவாளி போல் நிறுத்தி விசாரிப்பது எப்படி? என்று ஆத்திரப்பட்டார். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர். எங்களுடைய கடமை நாங்கள் நாங்கள்  செய்கிறோம்  என்று கூறினார். அதன் பின்பு அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்றனர். அவருடைய உடைமைகளையும் வரவழைத்தனர். பின்பு உடமைகளில் போதைப்பொருட்கள், மற்றும் அபாயகரமான பொருட்கள் ஏதாவது இருக்கிறதா? என்பது பற்றி அறிவதற்காக, சுங்க அதிகாரிகள் பயன்பாட்டுக்காக உள்ள, ஸ்னீப்பர் என்ற பெயருடைய பெண் மோப்ப நாய் மூலம் பரிசோதித்தனர். 
 
போதைப்பொருளை கண்டுபிடித்த மோப்பநாய்:
 
மோப்ப நாய் அந்தப் பெண் பயணியின் உடமையை மோப்பம் பிடித்தது. பின்பு அதில்  போதைப் பொருட்கள் இருக்கிது என்று குரைத்துக் காட்டியது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பெண் பயணியின் உடமையை திறந்து பார்த்து சோதித்தனார். அதனுள் மெத்தோ குயிலோன் என்ற போதை பொருள் ஒரு கிலோ 542 கிராம் மற்றும் ஹெராயின் போதை பொருள் 644 கிராம் இருந்தன. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த  போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த போதைப் பொருட்களின்  மொத்த சர்வதேச மதிப்பு ரூபாய் 5.35 கோடி. இதை அடுத்து உகாண்டா நாட்டு பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இவர் சென்னையில் யாருக்காக இந்த போதை பொருளை கடத்தி வந்தார்? சென்னையில் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார் யாரெல்லாம் இருக்கின்றனர்? என்று இந்த இளம் பெண்ணிடம் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உகாண்டா நாட்டுப் பெண் பயணி போதைப் பொருள் கடத்தி வந்ததை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகளின் துப்பு துலக்கும் பெண் மோப்ப நாய் கண்டுபிடித்து, அதிகாரிகளுக்கு காட்டி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
Embed widget