மேலும் அறிய

எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் அளித்த புகாரில், மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்துள்ள ஜெயலட்சுமி நகரை சார்ந்தவர் புவனேஷ் குமார் (வயது 29). இவர் ஆரணியில் பாஜக நகர தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 30 ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகாரில், எனது சித்தப்பா மகளான திருவண்ணாமலை பாஜக மகளிரணி மாவட்ட துணைத் தலைவர் வசந்திக்கு எம்.எல்.ஏ சீட்டு கேட்டு, அப்போதைய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர் நரோத்தமன் மற்றும் அதிமுக வடசென்னை மாவட்ட துணை செயலாளர் விக்ரமன் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

 


எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

 


இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி பணம் கேட்ட நிலையில், ரூ.50 இலட்சம் முதல் தவணையாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கொடுக்கப்பட்டது. பட்டியலில் பெயர் வந்ததும் மீதமுள்ள ரூ.50 இலட்சம் வழங்கப்படும் என பேசி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் பட்டியலில் எனது உறவினர் வசந்தியின் பெயர் இல்லாத காரணத்தால், அவர்களிடம் கேட்கப்பட்டது.

இதற்கு முதலில் மழுப்பலாக பதிலளித்த இருவரும், பணத்தை திரும்ப கேட்டதற்கு பணம் தராமல் கொலை மிரட்டல் விடுத்து இருக்கின்றனர். இது தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழிசை சவுந்தர்ராஜன் உட்பட பலரிடம் முறையிட்டும் எந்த ஒரு பலனில்லை. மேலும், சென்னை வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் முறையிட்டும் எந்த விதமான பலனளிக்கைவில்லை . இதனால் உங்களிடம் புகார் அளித்துள்ளேன் என்றுள்ளார். 

 


எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

சம்பந்தப்பட்ட நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இந்த புகாரில் விசாரணைக்கான முகாந்திரம் உள்ளதா என்பதற்கான  குறித்து இது தொடர்பாக ஆராய்ந்து வரும் காவல் துறையினர், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முகாந்திரம் சட்ட ரீதியாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புகாரின் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று தற்போது பாண்டி பஜார் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக மத்திய அமைச்சர் உதவியாளராக இருந்த நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டிபாபு, அதிமுக பிரமுகர் விஜயராமன் மற்றும் அவரது மகன் சிவபாலாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 294(பி) - ஆபாசமாக திட்டுதல், 406 - நம்பிக்கை மோசடி, 420 - பண மோசடி, 506(1) - கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் போலீசார் மத்திய அமைச்சரின் உதவியாளர் நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு, வடசென்னை மாவட்ட அதிமுக நிர்வாகி விஜயராமன், அவரது மகன் சிவபாலாஜி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 4 நபர்களையும் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

இதைவிட ஒரு நிர்வாகத் திறமையின்மை இருக்க முடியுமா? மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே உச்சக்கட்ட கொடுமை!
இதைவிட ஒரு நிர்வாகத் திறமையின்மை இருக்க முடியுமா? மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே உச்சக்கட்ட கொடுமை!
மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Embed widget