மேலும் அறிய

எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் அளித்த புகாரில், மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்துள்ள ஜெயலட்சுமி நகரை சார்ந்தவர் புவனேஷ் குமார் (வயது 29). இவர் ஆரணியில் பாஜக நகர தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 30 ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகாரில், எனது சித்தப்பா மகளான திருவண்ணாமலை பாஜக மகளிரணி மாவட்ட துணைத் தலைவர் வசந்திக்கு எம்.எல்.ஏ சீட்டு கேட்டு, அப்போதைய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர் நரோத்தமன் மற்றும் அதிமுக வடசென்னை மாவட்ட துணை செயலாளர் விக்ரமன் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

 


எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

 


இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி பணம் கேட்ட நிலையில், ரூ.50 இலட்சம் முதல் தவணையாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கொடுக்கப்பட்டது. பட்டியலில் பெயர் வந்ததும் மீதமுள்ள ரூ.50 இலட்சம் வழங்கப்படும் என பேசி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் பட்டியலில் எனது உறவினர் வசந்தியின் பெயர் இல்லாத காரணத்தால், அவர்களிடம் கேட்கப்பட்டது.

இதற்கு முதலில் மழுப்பலாக பதிலளித்த இருவரும், பணத்தை திரும்ப கேட்டதற்கு பணம் தராமல் கொலை மிரட்டல் விடுத்து இருக்கின்றனர். இது தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழிசை சவுந்தர்ராஜன் உட்பட பலரிடம் முறையிட்டும் எந்த ஒரு பலனில்லை. மேலும், சென்னை வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் முறையிட்டும் எந்த விதமான பலனளிக்கைவில்லை . இதனால் உங்களிடம் புகார் அளித்துள்ளேன் என்றுள்ளார். 

 


எம். எல்.ஏ., சீட்டு வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சர் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

சம்பந்தப்பட்ட நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இந்த புகாரில் விசாரணைக்கான முகாந்திரம் உள்ளதா என்பதற்கான  குறித்து இது தொடர்பாக ஆராய்ந்து வரும் காவல் துறையினர், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முகாந்திரம் சட்ட ரீதியாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புகாரின் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று தற்போது பாண்டி பஜார் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக மத்திய அமைச்சர் உதவியாளராக இருந்த நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டிபாபு, அதிமுக பிரமுகர் விஜயராமன் மற்றும் அவரது மகன் சிவபாலாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 294(பி) - ஆபாசமாக திட்டுதல், 406 - நம்பிக்கை மோசடி, 420 - பண மோசடி, 506(1) - கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் போலீசார் மத்திய அமைச்சரின் உதவியாளர் நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு, வடசென்னை மாவட்ட அதிமுக நிர்வாகி விஜயராமன், அவரது மகன் சிவபாலாஜி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 4 நபர்களையும் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget