மேலும் அறிய

Crime: சிறுமியை வன்கொடுமை செய்த கணவர்.. உடந்தையாக மனைவி.. இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு!

ஆவடி அருகே 4-வது சிறுமியை வன்கொடுமை செய்த கணவன் மற்றும் உடந்தையாக இருந்த மனைவி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆவடி அடுத்த அன்னனூர் அந்தோணி நகரில் 63 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், மனைவி ராஜம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டின் அருகில் ஒரு தம்பதி, தனது 4 வயது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜுன் 27-ஆம் தேதி அந்த நடுத்தர வயது தம்பதி தனது மகனை டியூஷனில் விட்டுவிட்டு தங்களது அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். 4 வயது சிறுமி மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், 4 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அலறி பயத்தில் சத்தமிட்டதால், அவர் சிறுமியின் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுயநினைவிழந்த சிறுமியை சணல் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், சிறுமி சடலத்தை கோணிப் பையில் அடைத்து, பாத்ரூமில் உள்ள ஒரு பக்கெட்டில் போட்டு வைத்துள்ளார். இதற்கு மீனாட்சி சுந்தரத்தின் மனைவி ராஜம்மாளும் உடந்தையாக இருந்துள்ளார்.

அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்த 4 வயது சிறுமியின் தாய், தனது மகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்து, பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது, ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரிடம் விசாரித்தபோது, நான் பார்க்கவில்லையே என்று கூறி சிறுமியை தேடுவது போல் நாடகமாடியுள்ளார். சிறுமியின் பெற்றோரை திசைதிருப்பி வேறு இடத்தில் தேடிப்பார்க்க அனுப்பி விட்டு, தன் வீட்டு பாத்ரூமில் இருந்த இறந்த சிறுமி உடலை அவர்கள் வீட்டு பாத்ரூமில் போட்டுவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தனது வீட்டு பாத்ரூமில் மகள் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். தீவிர விசாரணையில், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது மனைவியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Crime: சிறுமியை வன்கொடுமை செய்த கணவர்.. உடந்தையாக மனைவி.. இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு!

இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பு வழங்கினார். இதில் முதல் குற்றவாளியான மீனாட்சி சுந்தரத்திற்கு 4 பிரிவுகளின் கீழ் வழங்கிய தீர்ப்பில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்ட னையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், செலுத்த தவறினால் 2 மாதம் சிறைத்தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாதம் கூடுதல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதேபோல், சிறுமியின் கொலை மற்றும் கணவன் வன்கொடுமை செய்ததற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ராஜம்மாளுக்கு இரட்டை ஆயுள் தண்ட னையும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக 10 வருடம் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், செலுத்த தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

கணவன் மனைவி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி சுபத்ராதேவி இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி சுபத்ரா தேவி உத்தரவிட்டார். தீர்ப்புக்குப்பின் குற்றம் சாட்டப்பட்ட தம்பதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
Embed widget