மேலும் அறிய

Crime : கள்ளக்காதலியின் 2 மகன்களை கொல்ல முயற்சித்த கள்ளக்காதலன்..! விஷம் குடித்து தற்கொலை..!

சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலியின் மகன்களை விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக்காதலன், தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை, கொருக்குப்பேட்டையில் அமைந்துள்ளது பாரதிநகர். இங்குள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கவிதா. அவருக்கு வயது 32.  இந்த நிலையில், அவரது வீட்டில் நேற்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது, அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கவிதாவின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கே, கவிதாவின் இரண்டு மகன்களும், ஒரு 35 வயது ஆணும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கவிதாவிற்கும், போலீசாருக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 3 மயக்க நிலையில் இருந்த மூன்று பேரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Crime : கள்ளக்காதலியின் 2 மகன்களை கொல்ல முயற்சித்த கள்ளக்காதலன்..! விஷம் குடித்து தற்கொலை..!

இதையடுத்து, போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. கவிதாவிற்கும் அவரது கணவர் ரசூலுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். இந்த சூழலில், கவிதா வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த ராஜேஷ் ( வயது 35) என்பவருடன் கவிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் வட பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.  இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் பழகி வந்துள்ளனர். மேலும், ராஜேஷ் கவிதா வீட்டிற்கு அடிக்கடிச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கவிதாவின் இரண்டு மகன்களும் வளர்ந்து வந்ததால், ராஜேஷ் வீட்டிற்கு வருவதை கவிதா விரும்பவில்லை. இதனால், ராஜேஷிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். ஆனால், ராஜேஷ் கவிதாவை தன்னுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால், கவிதா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.


Crime : கள்ளக்காதலியின் 2 மகன்களை கொல்ல முயற்சித்த கள்ளக்காதலன்..! விஷம் குடித்து தற்கொலை..!

இந்த நிலையில், தன்னுடைய கள்ளக்காதலுக்கு கவிதாவின் இரண்டு மகன்கள்தான் காரணம் என்று ராஜேஷ் கருதினார். இதனால், அவர்களை ராஜேஷ் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இந்த சூழலில்தான், கவிதா வீட்டிற்கு சென்ற ராஜேஷ், தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷத்தை குளிர்பானத்தில் கலந்து சிறுவர்களுக்கு கொடுத்துள்ளார்.

குளிர்பானத்தில் விஷம் இருப்பதை அறியாத சிறுவர்கள் இருவரும் குளிர்பானத்தை குடித்தனர். அவர்கள் குடித்த பிறகு, ராஜேஷும் விஷத்தை குடித்தார். விஷம் குடித்த சில நிமிடங்களிலே மூன்று பேரும் மயக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவர்கள் இருவருக்கும் தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து கள்ளக்காதலன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : Crime: 40 வயதை பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தூத்துக்குடியில் ரவுடி கைது

மேலும் படிக்க : Crime : செஞ்சி அருகே திருமணமான 6 நாளில் புதுமணப்பெண் தற்கொலை.. மனமுடைந்த கணவரும் தற்கொலை

தலைப்பு செய்திகள்

" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget